மருந்து உற்பத்தியில் உயர் தரத்தை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை - மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா
May 22, 2025, 11:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருந்து உற்பத்தியில் உயர் தரத்தை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை – மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா

Web Desk by Web Desk
Jul 12, 2023, 08:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மருந்து உற்பத்தியில் உயர் தரத்தை உறுதி செய்யும் வகையில், ஒழுங்குமுறை அதிகாரிகள் 137 நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வில், 105 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும்  31 நிறுவனங்களில் உற்பத்தி தடைசெய்யப்பட்டு, 50 நிறுவனங்களில் உற்பத்திக்கான உரிமம், ரத்து செய்யப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர மருந்து நிறுவனங்களின் பிரதிநிதிகளை  சந்தித்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, சுய ஒழுங்குமுறை மூலம் சிறந்த உற்பத்தி நடைமுறையையொட்டி, தரமான மருந்துகளை விரைவாக விநியோகிக்க தயாராகயிருப்பது, குறு, சிறு மற்றும் நடுத்தர மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு முக்கியமானது என்று கூறினார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர மருந்து உற்பத்தித் துறையில் சுய ஒழுங்குமுறையின் அவசியம் குறித்து வலியுறுத்திய மத்திய அமைச்சர்,

உலகின் மருந்தகம் இந்தியா, என்ற நிலையை பராமரிப்பது முக்கியம் என்று சுட்டிக்காட்டினார். நமது தரமான உற்பத்திப்பொருட்களால் மருந்து உற்பத்தித் துறையில் சர்வதேச அளவில் நமது நாடு திகழ்வதாக அவர் தெரிவித்தார். பொருட்களின் மதிப்பு மற்றும் தரத்தை வலுப்படுத்துவதை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

போலியான மருந்துகளை தயாரிக்கும் அனைத்து மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைமை இயக்குநரகத்துக்கு  அறிவுறுத்தினார்.

இந்தியாவில்  தயாரிக்கப்படும் தரமான மருந்துகளுடன், எந்தவொரு சமரசமும் கிடையாது  என்று அவர் கூறினார். மருந்து உற்பத்தி நிறுவனங்களை ஆய்வு செய்ய சிறப்புப்படைகள் உருவாக்கப்பட்டு, கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

மருந்து உற்பத்தியில் உயர் தரத்தை உறுதி செய்யும் வகையில், ஒழுங்குமுறை அதிகாரிகள் 137 நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வில், 105 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். 31 நிறுவனங்களில் உற்பத்தி தடைசெய்யப்பட்டு, 50 நிறுவனங்களில் உற்பத்திக்கான உரிமம், ரத்து செய்யப்பட்டும், நிறுத்தி வைக்கப்பட்டும் உள்ளதாக டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

வடமாநில பேரிடரில் சிக்கிய தமிழர்கள் பத்திரமாக மீட்க்கப்பட்டு விரைவில் தமிழகம் திரும்புகின்றனர் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Post

தொலைதூர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு சிறந்த மொபைல் இணைப்பு வழங்குவது விரைவில் உறுதி செய்யப்படும்- மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

Related News

தேனி : தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் காரணமாக காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு!

திருச்சி : மதுபோதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்ம மரணம் – உறவினர்கள் சாலை மறியல்!

மதுரை : முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை – 6 பேர் கைது!

ஜப்பான் சென்ற குழுவினருக்கு இந்திய தூதரகம் சார்பில் வரவேற்பு!

கர்நாடக உள்துறை அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை!

நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம் : ஓராண்டாகியும் நீதி கிடைக்கவில்லை – கே.எஸ். அழகிரி

Load More

அண்மைச் செய்திகள்

ஜென்.இ.மேன்’ தமிழ் ரீமேக்கில் நடிக்கும் விமல்!

ரோகித் சர்மா ஓய்வு? : வெளியான புதிய தகவல்!

உடல்நலக்குறைவால் உயிரிழந்த சிறுவன் பெற்றோருக்கு தெரியாமல் புதைப்பு!

அஸ்வின், ஜடேஜா சாதனையை முறியடித்த நூர் அகமது!

இன்றைய தங்கம் விலை!

பாகிஸ்தானில் பள்ளி பேருந்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் – குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் பலி!

சிந்து நதி நீர் நிறுத்தம் – பாகிஸ்தானில் முகமது அணையின் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தி வரும் சீனா!

சீனாவில் குத்துச்சண்டை போட்டிக்கு தயாராகும் ரோபோக்கள்!

சீனாவில் இடிந்து விழுந்த ஃபெங்யாங் டிரம் கோபுரம் – சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம்!

திரைப்படங்கள் இணையத்தில் வெளியாவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் – நடிகர் சூரி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies