இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தீவிரம்: 200 பேர் பலி... 31 பேர் மாயம்!
Sep 18, 2025, 10:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தீவிரம்: 200 பேர் பலி… 31 பேர் மாயம்!

Web Desk by Web Desk
Aug 4, 2023, 02:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், மழைக்கு 200 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் 31 பேரை காணவில்லை என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த மாதம் தொடங்கிய பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும், மேகவெடிப்பு காரணமாக வரலாறு காணாத மழை பெய்ததால் முன்னெப்போதும் இல்லாத வகையில், பியாஸ்நதி கரைபுரண்டு ஓடுகிறது. பியாஸ்நதி வெள்ளத்தில் 30,000 வீடுகள் மூழ்கின. ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. சாலைகள், பாலங்கள், ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், 300 சாலைகள் மூடப்பட்டிருப்பதோடு, 274 மின்சாரம் மற்றும் 42 நீர் வழங்கல் திட்டங்கள் தடைபட்டிருக்கின்றன. குறிப்பாக, சோலன் மாவட்டத்தில் கல்கா – சிம்லா 4 வழி தேசிய நெடுஞ்சாலை 5 நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டதால், சிம்லாவில் சுற்றுலாத்துறை பேரழிவை எதிர்கொண்டிருக்கிறது.

இந்தப்  பருவமழை தொடர்ந்து நீடித்து வருவதால், 79 இடங்களில் நிலச்சரிவும், 53 இடங்களில் திடீர் வெள்ளமும் ஏற்பட்டிருக்கிறது. வெள்ளத்தில் 774 வீடுகள் முழுமையாக இடிந்து விட்டன. 7317 வீடுகள் பாதியளவுக்குச்  சேதமடைந்திருக்கின்றன. மேலும், 254 கடைகளும், 2337 மாட்டுக் கொட்டகைகளும் சேதமடைந்திருக்கின்றன. இதன் மூலம் மாநில அரசின் உட்கட்டமைப்புக்கு ஏற்பட்ட இழப்பு 6,563.58 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

மேலும், பருவமழை தொடங்கியதில் இருந்து, கடந்த 41 நாட்களில் மட்டும் 200 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 31 பேர் மாயமாகி இருப்பதாகவும் மாநிலப்  பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது. இவர்களில் 57 பேர் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளம் காரணமாகவும், 143 பேர் மழைக்கால விபத்துகளாலும் உயிரிழந்திருப்பதாகத்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும்  அஞ்சப்படுகிறது. இதனிடையே, மாநிலத்தில் அடுத்த 2 நாட்களுக்குக்  கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

ShareTweetSendShare
Previous Post

நீங்க நடந்துக்கிறதைப் பொறுத்தே நட்பு: பாகிஸ்தானுக்கு அரிந்தம் பாக்சி பதிலடி!

Next Post

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

Related News

எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்? – பாக். – சவூதி பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்!

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

அமெரிக்க காதலி இந்தியாவில் எரித்துக் கொலை : பகீர் கிளப்பும் பின்னணி – நடந்தது என்ன?

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!

தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு – அண்ணாமலை கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி குழுவை மிரட்டிய திமுக பிரமுகர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்!

மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்க முயன்ற திமுக பிரமுகர் : அண்ணாமலைக் கண்டனம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான் – எச்சரித்த ஐசிசி!

காட்டுமன்னார்கோவில் அருகே கொதிக்கும் எண்ணெயை கணவர் காலில் ஊற்றிய மனைவி கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies