இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தீவிரம்: 200 பேர் பலி... 31 பேர் மாயம்!
Jun 15, 2026, 09:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தீவிரம்: 200 பேர் பலி… 31 பேர் மாயம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 4, 2023, 02:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், மழைக்கு 200 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் 31 பேரை காணவில்லை என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த மாதம் தொடங்கிய பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும், மேகவெடிப்பு காரணமாக வரலாறு காணாத மழை பெய்ததால் முன்னெப்போதும் இல்லாத வகையில், பியாஸ்நதி கரைபுரண்டு ஓடுகிறது. பியாஸ்நதி வெள்ளத்தில் 30,000 வீடுகள் மூழ்கின. ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. சாலைகள், பாலங்கள், ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், 300 சாலைகள் மூடப்பட்டிருப்பதோடு, 274 மின்சாரம் மற்றும் 42 நீர் வழங்கல் திட்டங்கள் தடைபட்டிருக்கின்றன. குறிப்பாக, சோலன் மாவட்டத்தில் கல்கா – சிம்லா 4 வழி தேசிய நெடுஞ்சாலை 5 நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டதால், சிம்லாவில் சுற்றுலாத்துறை பேரழிவை எதிர்கொண்டிருக்கிறது.

இந்தப்  பருவமழை தொடர்ந்து நீடித்து வருவதால், 79 இடங்களில் நிலச்சரிவும், 53 இடங்களில் திடீர் வெள்ளமும் ஏற்பட்டிருக்கிறது. வெள்ளத்தில் 774 வீடுகள் முழுமையாக இடிந்து விட்டன. 7317 வீடுகள் பாதியளவுக்குச்  சேதமடைந்திருக்கின்றன. மேலும், 254 கடைகளும், 2337 மாட்டுக் கொட்டகைகளும் சேதமடைந்திருக்கின்றன. இதன் மூலம் மாநில அரசின் உட்கட்டமைப்புக்கு ஏற்பட்ட இழப்பு 6,563.58 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

மேலும், பருவமழை தொடங்கியதில் இருந்து, கடந்த 41 நாட்களில் மட்டும் 200 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 31 பேர் மாயமாகி இருப்பதாகவும் மாநிலப்  பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது. இவர்களில் 57 பேர் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளம் காரணமாகவும், 143 பேர் மழைக்கால விபத்துகளாலும் உயிரிழந்திருப்பதாகத்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும்  அஞ்சப்படுகிறது. இதனிடையே, மாநிலத்தில் அடுத்த 2 நாட்களுக்குக்  கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

ShareTweetSendShare
Previous Post

நீங்க நடந்துக்கிறதைப் பொறுத்தே நட்பு: பாகிஸ்தானுக்கு அரிந்தம் பாக்சி பதிலடி!

Next Post

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

Related News

3வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; நயினார் நேரில் ஆறுதல்

சபரிமலையில் சாமி தரிசனம் செய்த அன்புமணி தம்பதி

தவெக எம்.எல்.ஏவுக்காக காத்திருந்த மூத்த தலைவர்; இவருக்கு இந்த கதியா ?

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies