இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தீவிரம்: 200 பேர் பலி... 31 பேர் மாயம்!
Jul 31, 2026, 02:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தீவிரம்: 200 பேர் பலி… 31 பேர் மாயம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 4, 2023, 02:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், மழைக்கு 200 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் 31 பேரை காணவில்லை என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த மாதம் தொடங்கிய பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும், மேகவெடிப்பு காரணமாக வரலாறு காணாத மழை பெய்ததால் முன்னெப்போதும் இல்லாத வகையில், பியாஸ்நதி கரைபுரண்டு ஓடுகிறது. பியாஸ்நதி வெள்ளத்தில் 30,000 வீடுகள் மூழ்கின. ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. சாலைகள், பாலங்கள், ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், 300 சாலைகள் மூடப்பட்டிருப்பதோடு, 274 மின்சாரம் மற்றும் 42 நீர் வழங்கல் திட்டங்கள் தடைபட்டிருக்கின்றன. குறிப்பாக, சோலன் மாவட்டத்தில் கல்கா – சிம்லா 4 வழி தேசிய நெடுஞ்சாலை 5 நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டதால், சிம்லாவில் சுற்றுலாத்துறை பேரழிவை எதிர்கொண்டிருக்கிறது.

இந்தப்  பருவமழை தொடர்ந்து நீடித்து வருவதால், 79 இடங்களில் நிலச்சரிவும், 53 இடங்களில் திடீர் வெள்ளமும் ஏற்பட்டிருக்கிறது. வெள்ளத்தில் 774 வீடுகள் முழுமையாக இடிந்து விட்டன. 7317 வீடுகள் பாதியளவுக்குச்  சேதமடைந்திருக்கின்றன. மேலும், 254 கடைகளும், 2337 மாட்டுக் கொட்டகைகளும் சேதமடைந்திருக்கின்றன. இதன் மூலம் மாநில அரசின் உட்கட்டமைப்புக்கு ஏற்பட்ட இழப்பு 6,563.58 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

மேலும், பருவமழை தொடங்கியதில் இருந்து, கடந்த 41 நாட்களில் மட்டும் 200 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 31 பேர் மாயமாகி இருப்பதாகவும் மாநிலப்  பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது. இவர்களில் 57 பேர் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளம் காரணமாகவும், 143 பேர் மழைக்கால விபத்துகளாலும் உயிரிழந்திருப்பதாகத்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும்  அஞ்சப்படுகிறது. இதனிடையே, மாநிலத்தில் அடுத்த 2 நாட்களுக்குக்  கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

ShareTweetSendShare
Previous Post

நீங்க நடந்துக்கிறதைப் பொறுத்தே நட்பு: பாகிஸ்தானுக்கு அரிந்தம் பாக்சி பதிலடி!

Next Post

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies