நிலவை நெருங்கிக் கொண்டிருக்கும் சந்திராயன்-3 விண்கலம், பூமியிலிருந்து கிளம்பும்போது எடுத்த பூமியின் புகைப்படத்தையும், நிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழையும்போது எடுத்த நிலவின் மேற்பரப்பு புகைப்படத்தையும், படம் பிடித்து அனுப்பிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திராயன்-3 விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
ஏவிய 16 நிமிடத்தில் புவியின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான்-3 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து, பூமியைச்சுற்றி நீள்வட்ட பாதையில் பயணித்த விண்கலம், சில நாட்கள் இடைவெளியில் ஒவ்வொரு சுற்றாக விரிவு படுத்தப்பட்டு வந்தது.பூமியின் 5 சுற்று நீள்வட்ட பாதையை முடித்துக்கொண்ட சந்திரயான்-3 விண்கலம் புவிவட்ட பாதையிலிருந்து விலகி சந்திரனை நோக்கி நகர ஆரம்பித்தது.
நிலவு சுற்றுவட்ட பாதைக்குள் கடந்த ஆறாம் தேதி, நுழைந்த சந்திரயான் -3 விண்கலம் நிலவுக்கு, 124 கிமீ x 1872கிமீ தொலைவிற்கு கொண்டுவரப்பட்டது.
இதனை தொடர்ந்து, சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட இரண்டாம் கட்ட சுற்றுப்பாதையின் குறைப்பு நேற்று (09.08.2023) வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. என்ஜின்களின் மறுசுழற்சி சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்தது, இப்போது 174 கிமீ x 1437 கிமீ. தொலைவில் கொண்டு வரப்பட்டது.
அதன் சுற்றுப்பாதையை மேலும் குறைப்பதற்கான அடுத்தகட்ட செயல்பாடு ஆகஸ்ட் 14, 2023 அன்று 11:30 முதல் 12:30 மணி வரை திட்டமிடப்பட்டுள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
Chandrayaan-3 Mission:
🌎 viewed by
Lander Imager (LI) Camera
on the day of the launch
&
🌖 imaged by
Lander Horizontal Velocity Camera (LHVC)
a day after the Lunar Orbit InsertionLI & LHV cameras are developed by SAC & LEOS, respectively https://t.co/tKlKjieQJS… pic.twitter.com/6QISmdsdRS
— ISRO (@isro) August 10, 2023
தற்போது, சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்பட்ட ஜூலை 14ஆம்
நாளில் லேண்டர் இமேஜர் (Lander Imager) கேமரா எடுத்த பூமியின் மேற்பரப்பு புகைப்படம் மற்றும் ஆகஸ்ட் 6-ம் நாள் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டப்பின், Lander Horizontal Velocity Camera மூலம் எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.