ஐக்கிய முற்போக்கு கூட்டணி புதைக்கப்பட்டு விட்டது: பிரதமர் மோடி விமர்சனம்!
Mar 17, 2026, 05:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி புதைக்கப்பட்டு விட்டது: பிரதமர் மோடி விமர்சனம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 10, 2023, 09:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐக்கிய முற்போக்கு கூட்டணி புதைக்கப்பட்டு விட்டது. இதற்கான இறுதி அஞ்சலிக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது என்று பாரதப் பிரதமர் மோடி, காங்கிரஸ் கூட்டணியைக்  கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப்  பதிலளித்து பேசிய பாரதப் பிரதமர் மோடி, “ஊழல் செய்த எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்திருக்கின்றன. எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் முதல் நாள் ராகுல் காந்தி பேசாதது ஏன் என்பது தெரியவில்லை. அதேபோல, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவராக இருந்தும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு பேச வாய்ப்பு அளிக்காதது ஏன் என்பதும் தெரியவில்லை.

கட்சியை விட தேச நலனை முக்கியமாகக் கருத வேண்டும். தேசத்தின் பலம் மீது காங்கிரஸுக்கு நம்பிக்கை இல்லை. பாகிஸ்தானுக்கு எதிராக துல்லியய தாக்குதல் நடத்தியபோதுகூட, அதை காங்கிரஸ் அரசியலாக்கியது. இந்தியா தயாரித்த கொரோனா தடுப்பூசியைக் கூட காங்கிரஸ் நம்பவில்லை. பெரும்புரட்சியை ஏற்படுத்திய டிஜிட்டல் இந்தியா திட்டத்தைக்கூட காங்கிரஸ் கிண்டல் செய்தது. பாகிஸ்தான் என்ன சொல்கிறதோ அதைத்தான் காங்கிரஸ் நமபுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி எதுவுமே செய்தது கிடையாது.

தமிழக மக்களுக்குக்  காங்கிரஸ் மீது நம்பிக்கை இல்லை. தமிழகத்தில் 1962-ல் தான் காங்கிரஸ் கடைசியாக வெற்றிபெற்றது. அதேபோல, மேற்குவங்கம், திரிபுரா, ஒடிஸா மாநில மக்களும் காங்கிரஸை நம்பவில்லை. மேற்குவங்கத்தில் 1972-ம் ஆண்டோடு காங்கிரஸின் சகாப்தம் முடிந்து விட்டது. ஒரு குடும்பத்தின் பிடியில் காங்கிரஸ் சிக்கி இருக்கிறது. மேலும், காங்கிரஸ் கட்சிக்கென தனித்தன்மை கிடையாது. கட்சியின் கொடி, சின்னம் கூட திருடப்பட்டது தான்.

அதேபோல, சோனியா குடும்பம், காந்தி பெயரை பயன்படுத்தி வருகிறது. காந்தி என்கிற அந்தப் பெயரும் திருடப்பட்டது தான். காங்கிஸ் கட்சி ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம். மேலும், எதிர்க்கட்சிகளின் கூட்டணி இந்தியா கூட்டணி அல்ல, ஈகோ கூட்டணி, அகங்காரக் கூட்டணி.

ராகுல் காந்தி 24 மணிநேரமும் என்னையே நினைத்துக் கொண்டிருக்கிறார். பாரத மாதா குறித்து ராகுல் பேசியதை ஒருபோதும் மன்னிக்க முடியாது. நாடு 3 துண்டுகளாகப் பிரிய காரணமாக இருந்தவர்கள் பாரத மாதா கொலை செய்யப்பட்டதாகப் பேசுகிறார்கள். இப்படி எப்படி அவர்களால் பேச முடிகிறது. பாரத மாதா குறித்து பேசியதில் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

வந்தே மாதரம் என்கிற முழக்கத்தையும் காங்கிரஸ் கட்சி அவமானப்புடுத்தி இருக்கிறது. பொய் மூட்டைகளின் கடையாகவும், கொள்ளைக் கூடாரமாகவும் காங்கிரஸ் விளங்குகிறது. காங்கிரஸின் கடை விரைவில் இழுத்து மூடப்படும். உண்மையைக் கண்டு எதிர்க்கட்சிகள் ஓடுகின்றன. எதிர்க்கட்சிகள் செய்வது எல்லாமே அரசியல்தான். அவர்கள் மனதில் வேறொன்றும் இல்லை. அரசியலை கடந்து காங்கிரஸால் எதையும் சிந்திக்க முடியாது. 5 வருடம் வாய்ப்பளித்தும் ஆட்சியில் அமர எதிர்க்கட்சிகள் தயாராகவில்லை. நாட்டு மக்களுக்கு நீங்கள் ஏமாற்றத்தைத் தவிர வேறு எதையும் தரவில்லை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி புதைக்கப்பட்டு விட்டது. அதன் இறுதி அஞ்சலிக் கூட்டம் பெங்களூருவில் அனுசரிக்கப்பட்டது. இதில் நீங்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டீர்கள். எதிர்க்கட்சிகள், கூட்டணியின் பெயரை மாற்றினாலும் ஆட்சிக்கு வரமுடியாது. இந்தியா கூட்டணியில் அணைவருக்கும் பிரதமர் ஆசை இருக்கிறது. எதிர்க்கட்சிகள் முரண்பாடுகள் நிறைந்ததாக இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கூட்டணி. நிலைப்பாடு.

2014-ஆம் ஆண்டிலிருந்தே காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்து விட்டார்கள்” என்று பிரதமர் மோடி கூறினார்.

Tags: ModiParliamentpm modi latest speechmodi parliamentIndia Allience
ShareTweetSendShare
Previous Post

எனது 3-வது ஆட்சி காலத்தில் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கும்: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சூளுரை!

Next Post

நிலவைப் படம் பிடித்து அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம்!

Related News

SpaceX, xAI நிறுவனங்களில் இணைந்த தேவேந்திர சிங் சாப்லோட்.. உலகளாவிய AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்…

வழிக்கு வந்த ட்ரம்ப்..ரஷ்யா எண்ணெயை வாங்க பிற நாடுகளுக்கும் அனுமதி

முற்றுப்புள்ளி வைத்த ஈரான் தூதர் .. “ஈரான் கப்பல் மூழ்கடிப்பில் இந்தியாவிற்கு தொடர்பில்லை”

ஏன் LPG கேஸ் சிலிண்டருக்கு மட்டும் தட்டுப்பாடு ?

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

மேலூரில் காரில் பெண்கள் கொண்டு சென்ற ரூ.2.40 லட்சம் பறிமுதல்

Load More

அண்மைச் செய்திகள்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies