தவெகவிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என மக்கள் கேட்கும் நிலைக்கு தமிழகம் வந்துள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுக மகளிர் அணி மாநாட்டில், “மேடைக்கு மேடை கான்பிடண்ட் ஆக இருக்க கூறும் முதலமைச்சர் விஜய் முதலில் கான்பிடண்ட்டாக இருக்கிறாரா?” என கேள்வி எழுப்பினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மாதத்தில் சில எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளதாகவும், “தவெக ஆட்சியில் ஜனநாயகம் கேலிக்கூத்து ஆக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
தீர்ந்து போன சக்தியிடமே திருடும் தவெக ஒரு காய்ந்து போன சக்தி என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி இரு நாட்களுக்கு முன்பே இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டு இருந்தார். இதனை அனைத்து ஊடகங்களும் வெளியிட்டன.பாரதிராஜா குடும்பத்தினருக்கு பிரதமர் அனுப்பிய கடிதத்தை அவர் தற்போது வெளியிட்டுள்ளனர். அதனை மீண்டும் ஒரு சில ஊடகங்கள் பிரதமர் இரங்கல் என்ற பெயரில் செய்தியாக வெளியிடுகின்றன.
















