தயாநிதி மாறன் பேச்சு : விபரீதமான மற்றும் இழிவான நோக்கம் கொண்டவை!
Jul 7, 2025, 02:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தயாநிதி மாறன் பேச்சு : விபரீதமான மற்றும் இழிவான நோக்கம் கொண்டவை!

ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்து அறிக்கை.

Web Desk by Web Desk
Aug 24, 2023, 10:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக ஆளுநரின் குடும்ப விழாவில் அரசு பணம் பயன்படுத்தப்பட்டதாக திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் பொதுவெளியில் குற்றஞ்சாட்டிப் பேசியதற்கு ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.

அந்த தகவல்கள் தவறானவை என்பதோடு விபரீதமான மற்றும் இழிவான நோக்கம் கொண்டவை என்பதால் நடந்தவை பொது வெளியில் அறியப்பட வேண்டும் என்றும் ஆளுநர் மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

நடந்த உண்மைகள்:

• மாண்புமிகு ஆளுநர் அவர்கள் பிப்ரவரி 21 – 232022 அன்று ஊட்டியில் குடும்ப நிகழ்ச்சியை நடத்தினார்.

மாண்புமிகு ஆளுநரின் விருந்தினர்கள் அனைவரும் தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். ராஜ் பவனில் யாரும் தங்கவில்லை.

• விருந்தினர்கள் மட்டுமன்றி மாண்புமிகு ஆளுநரின் குடும்ப உறுப்பினர்களின் பயன்பாட்டுக்கும் கூட தனியார் வாகனங்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டன. அரசு வாகனம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை.

• தனியார் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது, மேலும் ராஜ் பவன்சமையலறை, விருந்தினர்களுக்கு தேநீர் அல்லது காஃபி வழங்குவதற்கு கூட பயன்படுத்தப்படவில்லை.

• முழு நிகழ்வுக்கான விளக்கொளி வசதிகள் ராஜ் பவனில் இல்லாமல் ஒரு தனியார் மூலம் செய்யப்பட்டன.

• மலர் அலங்காரத்துக்கான பூக்கள் கூட சந்தையில் இருந்து தனிப்பட்ட முறையில் வாங்கப்பட்டன.

• முழு நிகழ்வுக்கான பணியாளர்கள் தனிப்பட்ட முறையில் பெறப்பட்டனர். ராஜ் பவன் ஊழியர்கள் எவரும் பயன்படுத்தப்படவில்லை. விருந்தினர்களுக்கான உணவு மற்றும் தங்குமிடம், வாகனங்களின் வாடகை கட்டணம், தேநீர் மற்றும் காஃபி உட்பட உணவு வழங்குதல், விளக்குகள், மலர்கள் மற்றும் மலர் அலங்காரங்கள், சேவை பணியாளர்கள் உட்பட நிகழ்வுக்கான முழு செலவையும் மாண்புமிகு ஆளுநரே தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டார்.

மாண்புமிகு ஆளுநர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கான உணவுக்கு கூட ஒவ்வொரு மாதமும் கட்டண ரசீது வழங்கப்படுகிறது. அதை ராஜ் பவன் செலுத்த உரிமையிருந்தாலும் அந்த செலவினத்தையும் மாண்புமிகு ஆளுநரே ஏற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

மாண்புமிகு ஆளுநர் மீது அவதூறு கற்பிக்கும் விதமாக மக்களவை உறுப்பினரை மேற்கோள்காட்டி வெளியான பொறுப்பற்ற மற்றும் விபரீத தகவல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு தமிழக ஆளுநர் மாளிகை அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது .

Tags: RAJ BHAVANRNRAVIdayanithimarangovernertamilnadu governer
ShareTweetSendShare
Previous Post

69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு – சிறந்த திரைப்படமாக ராக்கெட்ரி தேர்வு

Next Post

பிரக்ஞானந்தாவிற்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

Related News

2008 தாக்குதல்களின் போது மும்பையில் தான் இருந்ததாக தஹாவூர் ராணா ஒப்புதல்!

திருவள்ளூர் : பைக் மீது லாரி மோதி விபத்து – உயிர் தப்பிய குடும்பத்தினர்!

சேலம் : ஷேர் மார்க்கெட் முதலீடு என கூறி மோசடி – பேராசிரியர் கைது!

நீலகிரி : வேட்டையாட துப்பாக்கியுடன் வந்த 5 பேர் கைது!

ஈரோடு : பைக்கை தாறுமாறாக ஓட்டிய இளைஞருக்கு அபராதம்!

லக்கி பாஸ்கர் 2ம் பாகத்தை உருவாக்க திட்டம் – வெங்கி அட்லூரி!

Load More

அண்மைச் செய்திகள்

பறந்து போ படத்தை பாராட்டிய இயக்குநர் அட்லீ!

தெலுங்கு நடிகர்கள் விஜய்யிடம் கற்றுக்கொள்ள வேண்டும் – தில்ராஜூ

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

கள்ளக்குறிச்சி : தண்ணீரில் தூசி இருந்ததாக குற்றச்சாட்டு!

வரும் 25-ம் தேதி வெளியாகும் மாரீசன் படம்!

மதுரை : கேஸ் கசிவால் தீ விபத்து – எரிந்து சேதமடைந்த வீடு!

டிரெண்டிங் படத்தின் ‘என்னிலே என்னிலே’ பாடல்!

கர்நாடகா : அரசு பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து – 20 பயணிகள் காயம்!

மொஹரம் பண்டிகை – சரயு நதியில் விடப்பட்ட மொஹரம் தாசியா!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட திமுக அரசு மாணவர் நலனுக்காக செலவிடவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies