சந்திரயான்-3 வெற்றி: ஐ.நா. நிரந்தரத் தூதுக்குழு பாராட்டு!
Aug 19, 2025, 02:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திரயான்-3 வெற்றி: ஐ.நா. நிரந்தரத் தூதுக்குழு பாராட்டு!

Web Desk by Web Desk
Aug 25, 2023, 11:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதற்கு, ஐ.நா. நிரந்தர தூதுக்குழுவும், ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளரும் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்கள்.

நிலவின் வட துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் விண்கலத்தை அனுப்பின. ஆகவே, நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பியது. கடந்த மாதம் 14-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விணைவெளி ஆய்வு மையத்தில் இருந்து இஸ்ரோவால் செலுத்தப்பட்ட இந்த விண்கலம், திட்டமிட்டபடி கடந்த 23-ம் தேதி மாலை சரியாக 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.

இந்த வெற்றியை இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளும் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதுக்குழுவும் இந்த வெற்றியை கொண்டியது. இது தொடர்பாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் ருசிரா காம்போஜ், தனது எக்ஸ் பக்கத்தில், “சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றியை, நியூயார்க்கில் உள்ள நிரந்தரத் தூதரங்களில் உள்ள எங்கள் சகாக்களுடன் ஒன்றுகூடி நாங்கள் கொண்டாடினோம். இந்த சந்தர்ப்பத்தில் உங்களின் வருகைக்கும் அசைக்க முடியாத ஆதரவுக்கும் எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

பின்னர், நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தூதரகத்தில் செந்தியாளர்களைச் சந்தித்த ருசிரா காம்போஜ், “சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது மனிதகுலத்திற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். நாங்கள் நிலவின் தென்துருவத்தில் பெயரிடப்படாத பகுதிக்குள் நுழைகிறோம். இதில், குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், உலகில் எந்த நாடும் இன்றுவரை எட்டமுடியாத நிலவின் தென்துருவத்தை இந்தியா அடைந்திருப்பதுதான். இது இந்திய விஞ்ஞானிகள் அசாத்திய திறமையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் இந்தியாவின் இருப்பைக் குறிப்பது மட்டுமல்லாமல், 140 கோடி இந்தியர்களின் அபிலாஷைகளையும் நிறைவேற்றி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுப்படி, இந்தப் பணியின் வெற்றி இந்தியாவுக்கு மட்டுமானதல்ல. நம் அனைவருக்கும் சொந்தமானது. மேலும், ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பயனளிக்கும் எதிர்கால அறிவியல் சாதனைகளுக்கான வாக்குறுதியைக் கொண்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.

அதேபோல, ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரெசின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்த வெற்றி உற்சாகம் அளிக்கிறது. இதுவரை யாரும் தரையிறங்காத நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த இந்தியாவுக்கு வாழ்த்துகள். இது ஒரு மிகப்பெரிய சாதனை. இதை உலகமே உற்று நோக்குகிறது” என்று கூறியிருக்கிறார்.

Tags: Chandrayaan 3
ShareTweetSendShare
Previous Post

“ஆருத்ரா மோசடிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது” : அமர் பிரசாத் ரெட்டி அறிக்கை. .

Next Post

செவ்வாய் கிரகத்தின் சுழற்சி வேகம் அதிகரிக்கிறது: நாசா தகவல்

Related News

தர்மஸ்தலா விவகாரம் : தாம் கூறியது பொய் என தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சித் தலைமையிடம் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

கர்நாடகா : ஹெப்பல் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறப்பு!

ஸ்பெயின் : பலத்த காற்றால் அதிவேகமாக பரவும் காட்டுத்தீ!

சீனாவில் நிலத்தடி நீர் குழாய் வெடித்து சாலையை நீரூற்றாக மாற்றியது!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

கன்னியாகுமரியில் நிற்காமல் சென்ற லாரியை பிடிக்க முயன்ற போக்குவரத்து காவலர் காயம்!

உலகிலேயே சிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது : அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்!

சோம்நாத் கோயிலில் முதலமைச்சர் பூபேந்திர படேல் சுவாமி தரிசனம்!

ஓமன் : புழுதி புயலால் மக்கள் மிகுந்த சிரமம்!

கர்நாடகா : ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies