சந்திரயான்-3 வெற்றி: ஐ.நா. நிரந்தரத் தூதுக்குழு பாராட்டு!
Jul 3, 2026, 06:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திரயான்-3 வெற்றி: ஐ.நா. நிரந்தரத் தூதுக்குழு பாராட்டு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 25, 2023, 11:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதற்கு, ஐ.நா. நிரந்தர தூதுக்குழுவும், ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளரும் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்கள்.

நிலவின் வட துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் விண்கலத்தை அனுப்பின. ஆகவே, நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பியது. கடந்த மாதம் 14-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விணைவெளி ஆய்வு மையத்தில் இருந்து இஸ்ரோவால் செலுத்தப்பட்ட இந்த விண்கலம், திட்டமிட்டபடி கடந்த 23-ம் தேதி மாலை சரியாக 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.

இந்த வெற்றியை இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளும் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதுக்குழுவும் இந்த வெற்றியை கொண்டியது. இது தொடர்பாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் ருசிரா காம்போஜ், தனது எக்ஸ் பக்கத்தில், “சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றியை, நியூயார்க்கில் உள்ள நிரந்தரத் தூதரங்களில் உள்ள எங்கள் சகாக்களுடன் ஒன்றுகூடி நாங்கள் கொண்டாடினோம். இந்த சந்தர்ப்பத்தில் உங்களின் வருகைக்கும் அசைக்க முடியாத ஆதரவுக்கும் எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

பின்னர், நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தூதரகத்தில் செந்தியாளர்களைச் சந்தித்த ருசிரா காம்போஜ், “சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது மனிதகுலத்திற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். நாங்கள் நிலவின் தென்துருவத்தில் பெயரிடப்படாத பகுதிக்குள் நுழைகிறோம். இதில், குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், உலகில் எந்த நாடும் இன்றுவரை எட்டமுடியாத நிலவின் தென்துருவத்தை இந்தியா அடைந்திருப்பதுதான். இது இந்திய விஞ்ஞானிகள் அசாத்திய திறமையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் இந்தியாவின் இருப்பைக் குறிப்பது மட்டுமல்லாமல், 140 கோடி இந்தியர்களின் அபிலாஷைகளையும் நிறைவேற்றி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுப்படி, இந்தப் பணியின் வெற்றி இந்தியாவுக்கு மட்டுமானதல்ல. நம் அனைவருக்கும் சொந்தமானது. மேலும், ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பயனளிக்கும் எதிர்கால அறிவியல் சாதனைகளுக்கான வாக்குறுதியைக் கொண்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.

அதேபோல, ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரெசின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்த வெற்றி உற்சாகம் அளிக்கிறது. இதுவரை யாரும் தரையிறங்காத நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த இந்தியாவுக்கு வாழ்த்துகள். இது ஒரு மிகப்பெரிய சாதனை. இதை உலகமே உற்று நோக்குகிறது” என்று கூறியிருக்கிறார்.

Tags: Chandrayaan 3
ShareTweetSendShare
Previous Post

“ஆருத்ரா மோசடிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது” : அமர் பிரசாத் ரெட்டி அறிக்கை. .

Next Post

செவ்வாய் கிரகத்தின் சுழற்சி வேகம் அதிகரிக்கிறது: நாசா தகவல்

Related News

சீனாவை கழற்றிவிடும் ஜப்பான் : பிரதமர் மோடி- தகாய்ச்சி சந்திப்பின் பின்னணி – முழு விவரம்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது!

த.வெ.க. எம்.எல்.ஏவிடம் ரூ.35 கோடி பேரம் – சென்னையில் சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!

நடிகர் ரவி மோகன் இல்லத்தில் நகை திருட்டு வழக்கு – ஓட்டுனர் கைது!

இன்றைய தங்கம் விலை!

போதைப் பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாகாமல் இருக்க ஏபிவிபி சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – பணி நியமன ஆணைகளை வழங்கும் முதலமைச்சர்!

கோயில் புதுப்பிக்கும் பணிக்கு ஒரு லட்சம் லஞ்சம் – தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கைது!

நீங்கள் நிர்வாகம் கற்றுக் கொள்வதற்குள், இன்னும் எத்தனை தலைகள் உருள வேண்டும் – முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமர்நாத் யாத்திரை – ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!

பொன்முடிக்கு எதிரான வழக்கை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசப்பட்ட விவகாரம் – மேலும் 5 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல்!

தவெகவில் இணைந்தவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு – அமைச்சர் என்.ஆனந்த் உறுதி!

ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த விஜயபாஸ்கர்கள்!

ஈரான் போரால் 3 மாதங்களில் எரிபொருள் துறையில் 1,88,000 கோடி இழப்பு – ஹர்தீப் சிங் பூரி

இந்தியா – ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies