சந்திரயான்-3 வெற்றி: ஐ.நா. நிரந்தரத் தூதுக்குழு பாராட்டு!
Aug 20, 2026, 11:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திரயான்-3 வெற்றி: ஐ.நா. நிரந்தரத் தூதுக்குழு பாராட்டு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 25, 2023, 11:48 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதற்கு, ஐ.நா. நிரந்தர தூதுக்குழுவும், ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளரும் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்கள்.

நிலவின் வட துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் விண்கலத்தை அனுப்பின. ஆகவே, நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பியது. கடந்த மாதம் 14-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விணைவெளி ஆய்வு மையத்தில் இருந்து இஸ்ரோவால் செலுத்தப்பட்ட இந்த விண்கலம், திட்டமிட்டபடி கடந்த 23-ம் தேதி மாலை சரியாக 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.

இந்த வெற்றியை இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளும் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதுக்குழுவும் இந்த வெற்றியை கொண்டியது. இது தொடர்பாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் ருசிரா காம்போஜ், தனது எக்ஸ் பக்கத்தில், “சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றியை, நியூயார்க்கில் உள்ள நிரந்தரத் தூதரங்களில் உள்ள எங்கள் சகாக்களுடன் ஒன்றுகூடி நாங்கள் கொண்டாடினோம். இந்த சந்தர்ப்பத்தில் உங்களின் வருகைக்கும் அசைக்க முடியாத ஆதரவுக்கும் எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

பின்னர், நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தூதரகத்தில் செந்தியாளர்களைச் சந்தித்த ருசிரா காம்போஜ், “சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது மனிதகுலத்திற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். நாங்கள் நிலவின் தென்துருவத்தில் பெயரிடப்படாத பகுதிக்குள் நுழைகிறோம். இதில், குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், உலகில் எந்த நாடும் இன்றுவரை எட்டமுடியாத நிலவின் தென்துருவத்தை இந்தியா அடைந்திருப்பதுதான். இது இந்திய விஞ்ஞானிகள் அசாத்திய திறமையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் இந்தியாவின் இருப்பைக் குறிப்பது மட்டுமல்லாமல், 140 கோடி இந்தியர்களின் அபிலாஷைகளையும் நிறைவேற்றி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் கூற்றுப்படி, இந்தப் பணியின் வெற்றி இந்தியாவுக்கு மட்டுமானதல்ல. நம் அனைவருக்கும் சொந்தமானது. மேலும், ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பயனளிக்கும் எதிர்கால அறிவியல் சாதனைகளுக்கான வாக்குறுதியைக் கொண்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.

அதேபோல, ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரெசின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்த வெற்றி உற்சாகம் அளிக்கிறது. இதுவரை யாரும் தரையிறங்காத நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த இந்தியாவுக்கு வாழ்த்துகள். இது ஒரு மிகப்பெரிய சாதனை. இதை உலகமே உற்று நோக்குகிறது” என்று கூறியிருக்கிறார்.

Tags: Chandrayaan 3
Share
Tweet
SendShare
Previous Post

“ஆருத்ரா மோசடிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது” : அமர் பிரசாத் ரெட்டி அறிக்கை. .

Next Post

செவ்வாய் கிரகத்தின் சுழற்சி வேகம் அதிகரிக்கிறது: நாசா தகவல்

Related News

சவுதி கடல் பகுதியில் ஈரான் நடத்திய துப்பாக்கிச் சூடு; 2வது தமிழக மீனவர் உயிரிழப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியருக்கு மரண தண்டனை

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு; டீம் பாரத் என்ற தலைப்பில் ஆலோசனை

சென்னையில் நாளை தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம்; அமித் ஷா பங்கேற்பு

2027க்குள் 50 புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் : காத்திருக்கும் புதிய அனுபவம் : நீண்ட தூர ரயில் பயணிகளுக்கு SURPRISE வசதிகள் – சிறப்பு தொகுப்பு!

சீனாவின் கடல் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : Sea Guardian ட்ரோன்களை குத்தகைக்கு எடுத்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜகவில் புதிய அணியை களமிறக்கிய நிதின் நபின் : அனைத்து சமூகங்களுக்கும் சமவாய்ப்பு – சிறப்பு தொகுப்பு!

மின்கடத்தி கொள்முதல் முறைகேடு – 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வாகனம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

பால் கொள்முதல் விலை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

எப்போது பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது தெரியும் – முதல்வர் விஜய் பேச்சு!

மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies