சென்னையில் நடிகர் ரவி மோகன் இல்லத்தில் வைர நகை, பணம் திருட்டு வழக்கில் அவரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் ரவி மோகன் இல்லத்தில் வைர நெக்லஸ், இரண்டரை லட்ச ரூபாய் ரொக்கம் திருடு போனதாக கடந்த 22 ஆம் தேதி நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, நடிகர் ரவிமோகன் வீட்டின் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களிடம் காவல்துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தினர். இதில் ஓட்டுநர் ராஜேஷ் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து பணத்தை மீட்ட காவல்துறையினர், ஓட்டுநரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
















