பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 28ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
காலி மது பாட்டில்கள் திரும்பப் பெரும் திட்டம் கைவிடப்பட வேண்டும், சுழற்சி முறையில் பணி மாறுதல் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர்.
ஆனால், நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வரும் 28ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையாளருக்கு 11 தொழிற்சங்கங்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த கால போராட்டத்தை விட, தற்போதைய வேலை நிறுத்தம் மிகவும் தீவிரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
















