புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்கள் நலத் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பூர்வ பரிமாற்ற நாளையொட்டி, விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு நிதியுதவி மற்றும் பாராட்டு சான்று வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் நிர்வாகத்தில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக கூறினார். மாநில அந்தஸ்து கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், மத்திய அரசு மாநில அந்தஸ்து வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
















