தமிழக சட்டசபையில் துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் இன்று தொடங்குகின்றன.
கடந்த 5-ம் தேதி 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து மூன்று நாட்கள் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றன.
இதையடுத்து நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது. முதல் நாளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெறவுள்ளது.
















