ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.
தந்திரியாக முதல் முறையாக அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ள கண்டரு பிரம்மதத்தன் முன்னிலையில், மேல்சாந்தி கோயில் நடையைத் திறந்து தீபம் ஏற்றினார். இதையடுத்து சன்னிதானத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு, தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடைபெற உள்ளன. சபரிமலைக்கு வருகை தந்துள்ள பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
















