கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கின் உண்மைத் தன்மையை திசை திருப்ப வேண்டாம் என்றும், உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை எனவும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
4 நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழக சட்டப்பேரவை கூடியது. அப்போது, கோவை மாணவர் கொலை தொடர்பான சிறப்பு கவன தீர்மானத்தின்போது எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளன என்றும், கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.
மேலும், அமுதன் கொலை கோஷ்டி மோதல் அல்ல என்றும், போதைப்பொருள் கும்பல் குறித்து தகவல் தெரிவித்ததால் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் கூறினார். கோவை மாணவன் அமுதன் கொலையை தனிப்பட்ட சம்பவமாகவோ, கோஷ்டி பூசலாகவோ கடந்து போய்விட முடியாது எனக்கூறிய உதயநிதி, இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
















