அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தங்களது ஆதரவாளர்களுடன் தவெகவில் ஐக்கியமாகினர்.
அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்ற முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் உட்கட்சி பிரச்னை காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினர்.
இருவரும் தவெகவில் இணையப்போவதாக அறிவிப்பு வெளியிட்ட நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற இணைப்பு நிகழ்ச்சியில் தங்களது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தனர்.
அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் நடந்த இணைப்பு விழாவில் அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உட்பட ஆயிரக் கணக்கானோர் தவெகவில் இணைந்தனர்.
















