தவெகவில் இணைந்தவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் தெரிவித்தார்.
அதிமுகவில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர், தங்களது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தனர்.
இவ்விழாவில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், தவெகவில் இணைந்தவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்வோம் என்று தெரிவித்தார். மேலும், தவெகவில் இணைந்தவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் அரசியல் புரட்சி ஏற்பட்டுள்ளதாகவும், இனி விஜய் ஆட்சி தான் தொடரும் என்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இனி அனைத்து தேர்தலிலும் தவெக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
















