பஹல்காம் தாக்குதல் அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன என்பது குறித்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மனம் திறந்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து முதல்முறையாக பேட்டியளித்த அஜித் தோவல், பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை பிரதமர் மோடி அறிந்ததும், இதை செய்தது யார்? இதற்கு பொறுப்பானவர் யார்? என்றுதான் முதல் கேட்டதாக தெரிவித்தார்.
பயங்கரவாதிகள் பூமியிலோ, வானத்திலோ அல்லது பாதாளத்திலோ எங்கு ஒளிந்திருந்தாலும் தேடிச் சென்று தண்டிப்போம், அவர்களை மன்னிக்கவே கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்ததாகவும்,
நம்பகமான உளவுத் தகவல்களைக் கொண்டு, 2025ம் ஆண்டு மே 7ம் தேதி ’ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை ராணுவம் மேற்கொண்டதாகவும் அஜித் தோவல் குறிப்பிட்டார்.
வெறும் 23 நிமிடங்களில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்த அஜித் தோவல்,
பாகிஸ்தான் பதில் தாக்குதல்களை நடத்த முயன்றபோது, இந்திய படைகள் பதிலடித் தாக்குதல்கள் மூலம் அவர்களை பின்வாங்கச் செய்ததாகவும் கூறினார்.
இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் ராணுவ வலிமைக்கு, ’ஆபரேஷன் சிந்தூர்’ ஒரு சான்றாக அமைந்தது என்று அஜித் தோவல் தெரிவித்தார்.
















