தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் கைதான மேலும் 5 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்காவல் விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் ஏற்கனவே திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் ரமேஷ், சீனிவாசன், செல்வம், பத்திரிகையாளர் ராஜேஷ், கார்த்திக் ஆகிய மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களைத் திருவல்லிக்கேணி போலீசார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கைதான 5 பேரையும் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன் மூலம் இந்த விவகாரத்தில் இதுவரை மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
















