தடை செய்யப்பட்ட பான் மசாலாவுக்கு விளம்பரம் செய்ததாகக்கூறி, பாலிவுட் நடிகர்கள் ஷாரூக் கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராஃப்க்கு மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பான் மசாலாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலிவுட் நடிகர்கள், ஷாரூக் கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராஃப் தொடர்ந்து ’விமல் எலைச்சி’ எனப்படும் பான் மசாலாவுக்கு விளம்பரம் செய்து வருகின்றனர்.
அவர்களது விளம்பரங்கள், மகாராஷ்டிராவில் தொடர்ந்து அனைத்து வகையான மீடியாக்களிலும் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ஷாரூக் கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெராஃப்க்கு மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
15 நாட்களுக்குள் சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. கடந்த 11ஆம் தேதி அனுப்பப்பட்ட நோட்டீஸ் தற்போது வெளியாகியுள்ளது.
















