தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 20ம் தேதியன்று ஆத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், விஜய் குறித்து அவதூறாகவும் ஒருமையிலும் பேசியதாக தவெக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், இன்று ஆத்தூர் பேரூராட்சி பகுதியில் ஆய்வில் ஈடுபட்டிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.தனது சொந்தக் காரில் வர அனுமதிக்குமாறு அவர் கோரியும், போலீசார் அதை ஏற்காமல் காவல் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு திரண்ட அவரது ஆதரவாளர்கள் முழக்கமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
















