டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் சனாய் தகாய்ச்சி முன்னிலையில் இரு நாடுகள் இடையிலான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின
புதுடெல்லியில் நடைபெற்ற 16-வது இந்தியா – ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் சனாய் தகாய்ச்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் முன்னிலையில் செயற்கை நுண்ணறிவு, பொருளாதார பாதுகாப்பு, எரிசக்தி உட்பட பல்வேறு துறைகளில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் இரு நாடுகளும் முதல் முறையாக பாதுகாப்புத் துறையில் இணைந்து உற்பத்தி மேற்கொள்ளும் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தமும் அடங்கும்.
















