அரசியலில் வேறுபாடுகள் இருந்தாலும், தேசநலனில் ஒன்றுபட வேண்டும் என்பதை தனது செயலாலும் சொற்களாலும் உணர்த்தியவர் வாஜ்பாய் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், மக்கள் மனதில் என்றும் அழியாத தடம் பதித்த முன்னாள் பாரத பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நினைவு நாள் இன்று என தெரிவித்துள்ளார்.
அவரின் உயர்ந்த சிந்தனைகளையும், எளிமையான அணுகுமுறையையும், நாட்டின் வளர்ச்சிக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் நன்றியுடன் நினைவுகூர்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கவிதை நயம் கொண்ட பேச்சும், கண்ணியமான அரசியல் பண்பும், இந்தியாவின் எதிர்காலம் மீதான அவரது நம்பிக்கையும் தலைமுறைகளை கடந்து ஊக்குவிக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
காலம் கடந்தாலும், வாஜ்பாய் அவர்களின் தேசப்பற்று, தொலைநோக்குப் பார்வை மற்றும் மக்கள் மீதான அக்கறை நம் நினைவுகளில் என்றும் உயிரோடு இருக்கும் என தெரிவித்துள்ளார்.
















