ஏஐ தொழில்நுட்பம் மனிதகுலத்தின் எதிர்காலத்தையே மாற்றும் என்று உலகமே பேசிக்கொண்டிருக்கும் வேளையில், ஒருவர் தொலைந்துபோன தனது செருப்பைக் கண்டுபிடிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்திய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
பொது இடங்கள் அல்லது விசேஷ வீடுகளில் செருப்புகளைக் கழற்றிவிட்டுத் திரும்பும்போது, குவியலாகக் கிடக்கும் காலணிகளுக்கு நடுவே தங்களின் செருப்பைத் தேடிக் கண்டுபிடிப்பது அனைவருக்கும் வழக்கமான ஒரு சவால்தான்.
ஆனால், இந்த சிக்கலைத் தீர்க்க அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த நினைத்த நபர் ஒருவர், மொத்த செருப்புக் குவியலையும் புகைப்படம் எடுத்து சாட்ஜிபிடிக்கு அனுப்பித் தனது செருப்பைக் கண்டுபிடித்து தர கோரியுள்ளார்.
மனிதர்களின் கண்களுக்கே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரே மாதிரி பல செருப்புகள் இருந்தபோதிலும், தனது பார்வைத்திறன் மூலம் குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக்காட்டி சாட்ஜிபிடியும் உதவி செய்துள்ளது.
“ராக்கெட் அனுப்பவும், பெரிய நோய்களைக் குணப்படுத்தவும் ஏஐ உருவாக்கப்பட்டால், நாம செருப்புத் தேடப் பயன்படுத்துகிறோம்” என்றும், “ஏஐ மூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கும்” என்றும் நெட்டிசன்கள் கருத்துகளைப் பகிர்ந்து இந்தச் சம்பவத்தை வைரலாக்கி வருகின்றனர்.
















