கரூர் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை வரும் 10-ம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் விஜய் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து 20 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறிய விஜய், தற்போது முதலமைச்சரான பின்பு வரும் 10 ஆம் தேதி முதன்முறையாக கரூருக்கு செல்ல உள்ளார்.
அவரின் கரூர் பயணத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
















