பாகிஸ்தான் அணி தங்களுடைய பிளேயிங் லெவனை ஏற்கனவே அறிவித்த நிலையில் இந்திய அணி பிளேயிங் லெவன் தற்போது வெளியாகியுள்ளது. இந்திய அணியில் தற்போது காயத்தில் இருந்த வீரர்கள் திரும்பி இருப்பதால் அணியின் பல மாற்றங்கள் நடந்துள்ளது.
எனினும் இந்தியாவின் முதல் மூன்று இடத்தில் எந்த குழப்பமும் இருக்காது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கில் மற்றும் மூன்றாவது வீரராக விராட் கோலி களமிறங்க உள்ளனர். நான்காவது வீரராக இந்தியாவின் நட்சத்திர வீரர் ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்க போகிறார். ஐந்தாவது இடத்தில் தான் தற்போது பெரிய குழப்பம் இருக்கிறது. கேஎல் ராகுல் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்பதால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இஷான் கிஷனை நடு வரிசையில் பயன்படுத்தலாமா இல்லை சஞ்சு சம்சனை பயன்படுத்திக் கொள்ளலாமா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. எனினும் மும்பை கோட்டா படி இஷான் கிஷனுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும்.
ஆறாவது வீரராக ஹர்திக் பாண்டியாவுக்கும் ,ஏழாவது வீரராக ஜடேஜாவுக்கும் அதிக வாய்ப்பு உள்ளது. எட்டாவது வீரராக சர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு வழங்கப்படும். இரண்டு வேகப்பந்துவீச்சாளராக பும்ரா மற்றும் முகமது சமி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். 11 வது வீரராக குல்தீப் யாதவுக்கு அணியில் இடம் கிடைக்கும். ஒருவேளை சூரியகுமார் யாதவை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு சூரியகுமார் யாதவுக்கு இடம் கிடைக்கலாம்.
இதுவே இப்போதைய ஆசிய உலகக்கோப்பை 2023-யின் இந்திய அணியின் ப்ளெயிங் லெவன் ஆகும்.