ஆசிய உலகக்கோப்பை 2023-யின் இன்றைய கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
ஆசிய உலகக்கோப்பை 2023 இன்றைய ஆட்டம் இலங்கையில் உள்ள பல்லேகலே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியானது மதியம் 3:00 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணி இதுவரை ஏழு முறை ஆசியக் கோப்பையை வென்றுள்ளது. ஆசிய உலகக்கோப்பை போட்டியில் இதுவரை இந்திய அணி தான் அதிக முறை கோப்பையை வென்ற அணி என்னும் பெருமையோடு உள்ளது. பாகிஸ்தான் அணி இதுவரை இரண்டு முறைகள் மட்டுமே ஆசியக் கோப்பையை வென்றுள்ளது.
இந்திய அணியின் பலமாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா, கில் மற்றும் விராட் கோலி உள்ளனர்.போட்டி தொடக்கத்தில் இவர்கள் ஆட்டம் இழக்காமல் இருந்தால் இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறுகிறார்கள். இந்தியாவின் பலவீனமாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை கூறுகிறார்கள்.
மேலும் பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக் மற்றும் ஃபகார் ஜமான் போன்றவர்களின் பேட்டிங் பலமாக உள்ளது. பாகிஸ்தான் அணி வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டிருந்தாலும், அந்த அணி சீரற்ற தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்தப் போட்டியின் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் 63% இந்தியா வெற்றிப் பெறும் என்றும் 37% பாகிஸ்தான் வெற்றிப் பெறும் என்றும் இணையத் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.