நீதிமன்ற உத்தரவுகளை அவமதித்த திமுக நிர்வாகி !
Oct 6, 2025, 06:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்ற உத்தரவுகளை அவமதித்த திமுக நிர்வாகி !

வாடகை வீட்டை காலி செய்ய மறுத்த திமுக நிர்வாகிக்கு உயர்நீதிமன்றம் கெடு .

Web Desk by Web Desk
Sep 2, 2023, 02:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

48 மணி நேரத்திற்குள் தி.மு.க. நிர்வாகியை வெளியேற்றி வீட்டை காலி செய்து உரிமையாளரிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் கெடு விதித்திருக்கிறது.

சென்னை தியாகராய நகரைச் சேர்ந்தவர் கிரிஜா. இவருக்குச் சொந்தமாக தி.நகர் அப்துல் அஜீஸ் தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒன்று இருக்கிறது. இந்த வீட்டில் ராமலிங்கம் என்பவர் நீண்டகாலமாக வாடகைக்குக் குடியிருந்து வருகிறார். இவர், தற்போது ஆளும் தி.மு.க. கட்சியின் வட்டச் செயலாளராக இருந்து வருகிறார். இவரை, வீட்டைக் காலி செய்யும்படி கடந்த 13 வருடங்களுக்கு முன்பிருந்து கூறிவருகிறார். ஆனால், ராமலிங்கம் வீட்டை காலி செய்ய மறுத்துவிட்டார்.

எனவே, வீட்டை காலி செய்து கொடுக்கக் கோரி, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் கிரிஜா வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், வீட்டைக் காலி செய்யுமாறு ராமலிங்கத்துக்கு உத்தரவிட்டது. ஆனால், ராமலிங்கம் காலி செய்யவில்லை. எனவே, கிரிஜா உச்ச நீதிமன்றத்தை நாடினார். வீட்டை காலி செய்யுமாறு உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டும், ராமலிங்கம் காலி செய்யவில்லை. மேலும், இத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ராமலிங்கம் தாக்கல் செய்ய மனுக்களையும் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்து விட்டன.

இது ஒருபுறம் இருக்க, கிரிஜா நீதிமன்றத்தை நாடியதால் 2017-ம் ஆண்டு முதல் வீட்டு வாடகை தருவதையும் ராமலிங்கம் நிறுத்தி விட்டார். இதையடுத்து,  கிரிஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமலிங்கம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரணைக்கு ராமலிங்கம் நேரில் ஆஜராகி, கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி வீட்டை காலி செய்து கொடுப்பதோடு, வாடகை பாக்கியையும் கொடுப்பதாக உறுதியளித்தார்.

ஆனாலும், ஆளும் கட்சிப் பிரமுகர் என்கிற தைரியத்தில், ராமலிங்கம் வீட்டையும் காலி செய்யவில்லை, வாடகை பாக்கியையும் கொடுக்கவில்லை. இத்தனைக்கும் ராமலிங்கத்துக்கு தண்டபாணி நகரில் சொந்த வீடு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, கிரிஜா மீண்டும் நீதிமன்றத்தை நாடினார்.

இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், “ராமலிங்கம் நீதிமன்ற உத்தரவுகளை தொடர்ந்து அவமதித்து வருகிறார். ஆகவே, இந்த வழக்கில் சென்னை பெருநகர காவல் ஆணையரை எதிர்மனுதாரராக சேர்க்கிறேன்.காவல் ஆணையர் போதுமான காவல்துறையினரை நியமித்து, 48 மணி நேரத்துக்குள் ராமலிங்கத்தை வெளியேற்றி, வீட்டின் உரிமையாளரான கிரிஜாவிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, வரும் 4-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த உத்தரவு குறித்து அரசு வழக்கறிஞர் உடனடியாக காவல்ஆணையரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டோ அல்லது மின்னணு தகவல் பரிமாற்றம் வாயிலாகவோ தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கிறார்.

Tags: chennai high courtjustice s. m . subramaniam
ShareTweetSendShare
Previous Post

ஓபன் டென்னிஸ் : போராடி வென்ற ஜோகோவிச்

Next Post

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நிறுத்தம்!

Related News

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies