நீதிமன்ற உத்தரவுகளை அவமதித்த திமுக நிர்வாகி !
Aug 22, 2025, 03:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்ற உத்தரவுகளை அவமதித்த திமுக நிர்வாகி !

வாடகை வீட்டை காலி செய்ய மறுத்த திமுக நிர்வாகிக்கு உயர்நீதிமன்றம் கெடு .

Web Desk by Web Desk
Sep 2, 2023, 02:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

48 மணி நேரத்திற்குள் தி.மு.க. நிர்வாகியை வெளியேற்றி வீட்டை காலி செய்து உரிமையாளரிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் கெடு விதித்திருக்கிறது.

சென்னை தியாகராய நகரைச் சேர்ந்தவர் கிரிஜா. இவருக்குச் சொந்தமாக தி.நகர் அப்துல் அஜீஸ் தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒன்று இருக்கிறது. இந்த வீட்டில் ராமலிங்கம் என்பவர் நீண்டகாலமாக வாடகைக்குக் குடியிருந்து வருகிறார். இவர், தற்போது ஆளும் தி.மு.க. கட்சியின் வட்டச் செயலாளராக இருந்து வருகிறார். இவரை, வீட்டைக் காலி செய்யும்படி கடந்த 13 வருடங்களுக்கு முன்பிருந்து கூறிவருகிறார். ஆனால், ராமலிங்கம் வீட்டை காலி செய்ய மறுத்துவிட்டார்.

எனவே, வீட்டை காலி செய்து கொடுக்கக் கோரி, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் கிரிஜா வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், வீட்டைக் காலி செய்யுமாறு ராமலிங்கத்துக்கு உத்தரவிட்டது. ஆனால், ராமலிங்கம் காலி செய்யவில்லை. எனவே, கிரிஜா உச்ச நீதிமன்றத்தை நாடினார். வீட்டை காலி செய்யுமாறு உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டும், ராமலிங்கம் காலி செய்யவில்லை. மேலும், இத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ராமலிங்கம் தாக்கல் செய்ய மனுக்களையும் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்து விட்டன.

இது ஒருபுறம் இருக்க, கிரிஜா நீதிமன்றத்தை நாடியதால் 2017-ம் ஆண்டு முதல் வீட்டு வாடகை தருவதையும் ராமலிங்கம் நிறுத்தி விட்டார். இதையடுத்து,  கிரிஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமலிங்கம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரணைக்கு ராமலிங்கம் நேரில் ஆஜராகி, கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி வீட்டை காலி செய்து கொடுப்பதோடு, வாடகை பாக்கியையும் கொடுப்பதாக உறுதியளித்தார்.

ஆனாலும், ஆளும் கட்சிப் பிரமுகர் என்கிற தைரியத்தில், ராமலிங்கம் வீட்டையும் காலி செய்யவில்லை, வாடகை பாக்கியையும் கொடுக்கவில்லை. இத்தனைக்கும் ராமலிங்கத்துக்கு தண்டபாணி நகரில் சொந்த வீடு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, கிரிஜா மீண்டும் நீதிமன்றத்தை நாடினார்.

இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், “ராமலிங்கம் நீதிமன்ற உத்தரவுகளை தொடர்ந்து அவமதித்து வருகிறார். ஆகவே, இந்த வழக்கில் சென்னை பெருநகர காவல் ஆணையரை எதிர்மனுதாரராக சேர்க்கிறேன்.காவல் ஆணையர் போதுமான காவல்துறையினரை நியமித்து, 48 மணி நேரத்துக்குள் ராமலிங்கத்தை வெளியேற்றி, வீட்டின் உரிமையாளரான கிரிஜாவிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, வரும் 4-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த உத்தரவு குறித்து அரசு வழக்கறிஞர் உடனடியாக காவல்ஆணையரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டோ அல்லது மின்னணு தகவல் பரிமாற்றம் வாயிலாகவோ தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கிறார்.

Tags: chennai high courtjustice s. m . subramaniam
ShareTweetSendShare
Previous Post

ஓபன் டென்னிஸ் : போராடி வென்ற ஜோகோவிச்

Next Post

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நிறுத்தம்!

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies