நீதிமன்ற உத்தரவுகளை அவமதித்த திமுக நிர்வாகி !
Jun 23, 2026, 03:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்ற உத்தரவுகளை அவமதித்த திமுக நிர்வாகி !

வாடகை வீட்டை காலி செய்ய மறுத்த திமுக நிர்வாகிக்கு உயர்நீதிமன்றம் கெடு .

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 2, 2023, 02:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

48 மணி நேரத்திற்குள் தி.மு.க. நிர்வாகியை வெளியேற்றி வீட்டை காலி செய்து உரிமையாளரிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் கெடு விதித்திருக்கிறது.

சென்னை தியாகராய நகரைச் சேர்ந்தவர் கிரிஜா. இவருக்குச் சொந்தமாக தி.நகர் அப்துல் அஜீஸ் தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒன்று இருக்கிறது. இந்த வீட்டில் ராமலிங்கம் என்பவர் நீண்டகாலமாக வாடகைக்குக் குடியிருந்து வருகிறார். இவர், தற்போது ஆளும் தி.மு.க. கட்சியின் வட்டச் செயலாளராக இருந்து வருகிறார். இவரை, வீட்டைக் காலி செய்யும்படி கடந்த 13 வருடங்களுக்கு முன்பிருந்து கூறிவருகிறார். ஆனால், ராமலிங்கம் வீட்டை காலி செய்ய மறுத்துவிட்டார்.

எனவே, வீட்டை காலி செய்து கொடுக்கக் கோரி, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் கிரிஜா வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், வீட்டைக் காலி செய்யுமாறு ராமலிங்கத்துக்கு உத்தரவிட்டது. ஆனால், ராமலிங்கம் காலி செய்யவில்லை. எனவே, கிரிஜா உச்ச நீதிமன்றத்தை நாடினார். வீட்டை காலி செய்யுமாறு உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டும், ராமலிங்கம் காலி செய்யவில்லை. மேலும், இத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ராமலிங்கம் தாக்கல் செய்ய மனுக்களையும் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்து விட்டன.

இது ஒருபுறம் இருக்க, கிரிஜா நீதிமன்றத்தை நாடியதால் 2017-ம் ஆண்டு முதல் வீட்டு வாடகை தருவதையும் ராமலிங்கம் நிறுத்தி விட்டார். இதையடுத்து,  கிரிஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமலிங்கம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரணைக்கு ராமலிங்கம் நேரில் ஆஜராகி, கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி வீட்டை காலி செய்து கொடுப்பதோடு, வாடகை பாக்கியையும் கொடுப்பதாக உறுதியளித்தார்.

ஆனாலும், ஆளும் கட்சிப் பிரமுகர் என்கிற தைரியத்தில், ராமலிங்கம் வீட்டையும் காலி செய்யவில்லை, வாடகை பாக்கியையும் கொடுக்கவில்லை. இத்தனைக்கும் ராமலிங்கத்துக்கு தண்டபாணி நகரில் சொந்த வீடு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, கிரிஜா மீண்டும் நீதிமன்றத்தை நாடினார்.

இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், “ராமலிங்கம் நீதிமன்ற உத்தரவுகளை தொடர்ந்து அவமதித்து வருகிறார். ஆகவே, இந்த வழக்கில் சென்னை பெருநகர காவல் ஆணையரை எதிர்மனுதாரராக சேர்க்கிறேன்.காவல் ஆணையர் போதுமான காவல்துறையினரை நியமித்து, 48 மணி நேரத்துக்குள் ராமலிங்கத்தை வெளியேற்றி, வீட்டின் உரிமையாளரான கிரிஜாவிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, வரும் 4-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த உத்தரவு குறித்து அரசு வழக்கறிஞர் உடனடியாக காவல்ஆணையரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டோ அல்லது மின்னணு தகவல் பரிமாற்றம் வாயிலாகவோ தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கிறார்.

Tags: chennai high courtjustice s. m . subramaniam
ShareTweetSendShare
Previous Post

ஓபன் டென்னிஸ் : போராடி வென்ற ஜோகோவிச்

Next Post

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நிறுத்தம்!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies