ஆசிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் போட்டியை பாகிஸ்தான்னுடன் மோதவிருக்கும் நிலையில் நேற்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியர்களிடம் பேசியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் சர்மா, ” அதிகமாக வெவ்வேறு கிரிக்கெட்டை விளையாடுவதே சமீபத்திய ஒருநாள் போட்டிகளில் அதிக ஸ்கோர்கள் இல்லாததற்குக் காரணம் என்று ஒப்புக்கொள்கிறேன். நான் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன், அதனால் அந்த அனுபவத்தை இனி வரும் போட்டிகளில் பயன்படுத்துவேன். அணிக்கு என்னிடமிருந்து என்ன தேவையோ அதைச் செய்வேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், “டாப் ஆர்டர் பேட்டராக எனது பங்கு அணிக்கு முக்கியமானது. அணிக்காக நீண்ட நேரம் பேட் செய்து அணியை நல்ல நிலையில் வைக்க வேண்டும். எனது அனுபவத்தைப் பயன்படுத்தி அணியை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருக்கும்’’ என்றும் கூறினார்.
ODI வரலாற்றில் மூன்று இரட்டை சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற பெருமைக்குரிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா என்பது குறிப்பிடதக்கது.