ஆசிய உலகக்கோப்பை இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி மழையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டி 3-வது லீக்கி போட்டி பல்லகெலேயில் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கின்றது.
இரு அணியின் கேப்டன்கள் முன்னிலையில் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியில் ரோஹித் சர்மா, சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா,விராட் கோலி, அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷபீக், பாபர் அசாம், ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், சவுத் ஷகீல், தயப் தாஹிர், சல்மான் அலி ஆகா, ஃபஹீம் அஷ்ரப், இப்திகார் அகமது, முஹம்மது நவாஸ், ஷதாப் கான், முகமது ஹரீஸ், முகமது ரிஸ்வான், ஹரிஸ் ரவூப், முகமது வாசிம், நசீம் ஷா, ஷஹீன் அப்ரிட, உசாமாமிர் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
இந்நிலையில் ஆட்டம் தொடங்கி 4 ஓவர்கள் கடந்த நிலையில் தற்போது மழை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய அணியின் ஸ்கோர் 15-0 ஆக உள்ளது.