தேசிய நல்லாசிரியர் விருதுகளை செப்டம்பர் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் வழங்குகிறார்!
Oct 26, 2025, 06:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய நல்லாசிரியர் விருதுகளை செப்டம்பர் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் வழங்குகிறார்!

Web Desk by Web Desk
Sep 2, 2023, 05:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆசிரியர்களுக்கு 2023-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுகளை செப்டம்பர் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் வழங்குகிறார்.

2023ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 75 பேருக்கு செப்டம்பர் 5 ஆம் தேதி புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்குகிறார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஆசிரியர் தினமாக இந்தியா கொண்டாடி வருகிறது. அன்று நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

தேசிய நல்லாசிரியர் விருதுகளின் நோக்கம், நாட்டில் ஆசிரியர்களின் தனித்துவமான பங்களிப்பைக் கொண்டாடுவதும், அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவையின் மூலம், கல்வியின் தரத்தை மேம்படுத்துவதும் ஆகும். அதோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் வாழ்க்கையை வளப்படுத்திய ஆசிரியர்களைக்  கௌரவிப்பதும் இதன் முக்கிய நோக்கம் ஆகும்.

ஒவ்வொரு விருதுடன் தகுதிச் சான்றிதழ், ரூ. 50,000 ரொக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை உள்ளடக்கியது. விருது பெறுவோர் பிரதமருடன் உரையாடும் வாய்ப்பையும் பெறுவார்கள்.

கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, கடுமையான மற்றும் வெளிப்படையான தேர்வுமுறை மூலம் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து  தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று தேசிய அளவிலான விழாவுக்கு ஏற்பாடு செய்து விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுமுதல், தேசிய நல்லாசிரியர் விருது, உயர்கல்வித் துறை மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆசிரியர்களையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர்கல்வி ஆசிரியர்கள், திறன் மேம்பாட்டு அமைச்சகத்தைச் சேர்ந்த 12 ஆசிரியர்கள் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையில் தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்கள், முனைவர் டி. காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் – அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அலங்காநல்லூர், மாலதி-அரசு மேல்நிலைப் பள்ளி, வீரகேரளம்புதூர்,

உயர்கல்வித் துறையில் தமிழ்நாட்டில் இருந்து விருது பெறுபவர்:

டாக்டர் எஸ்.பிருந்தா- பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரி, கோயம்புத்தூர்,

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்திடமிருந்து விருது பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்: எஸ்.சித்திரகுமார் -உதவி பயிற்சி அலுவலர், அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்)  ஆகியோர் குடியரசுத் தலைவரிடம் விருது பெறயுள்ளனா்.

Tags: President Droupadi Murmunational teacher awards
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறை ஶ்ரீமயூரநாதர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்!

Next Post

தென்னை நார் தொழிலை நசுக்கும் ஊழல் திமுக: அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

உத்தரகாண்ட் : அதிவேகமாக வளைவில் திரும்பிய காரால் விபத்து!

இந்திய ரயில்களை புகழ்ந்த ஸ்காட்டிஸ் இன்புளூயன்சர்!

Load More

அண்மைச் செய்திகள்

குவாங்சோ டென்னிஸ் போட்டி – ஆன் லி சாம்பியன்

கனடாவில் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை!

அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் காட்டு யானை!

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் வி.கே.சசிகலா!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies