கும்பாபிஷேகத்திற்குத் தயாராகும் கள்ளழகர் கோவில்!
Mar 15, 2026, 09:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கும்பாபிஷேகத்திற்குத் தயாராகும் கள்ளழகர் கோவில்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 4, 2023, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை என்று சொன்னாலே முதலில் ஞாபத்திற்கு வருவது கள்ளழகர் திருக்கோவில்தான்.

மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அழகர் திருக்கோவில். இந்த திருக்கோவில், மலை மீது அமைந்துள்ளதால், அழகர் கோவில் என்றும், இந்த மலையைச் சோலை மலை என்றும் பக்தர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

இங்கு, சங்கு, சக்கரம், கதை, வில், வாள் ஆகியவைகளைத் தாங்கிய நிலையில் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.

அதபோல, மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள், இங்கு அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பு.

பெரியாழ்வார், ஆண்டாள், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் என 6 ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற சிறப்பு மிக்க திவ்ய தேசமாகும்.

இத்தலத்தில் காவல் தெய்வமாகக் காட்சி தரும் கருப்பண்ண சுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவர் என போற்றப்படுகிறார்.

பதினெட்டாம் படியான் என்றும் பக்தர்களால் அன்போடு அழைப்படும் இவரைக் கும்பிட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது பக்கத்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

பெருமாள் மீது எமதர்மராஜன் மிகுந்த பக்தி கொண்டவர். ஒருமுறை, அவரது பக்தியை மெச்சிய பெருமாள், அவருக்கு நேரில் அருட்காட்சி கொடுத்தார்.

அப்போது, அவர், பெருமாளிடம் தினந்தோறும் ஒரு மு‌றையாவது பூஜை செய்ய வரம் வேண்டும் என்று கேட்க, அதன்படியே பெருமாளும் வரம் அருளினார். இதனால், இங்கு ஒவ்வொரு நாளும் நடக்கும் அர்த்த ஜாம பூஜையை எமதர்மராஜனே நடத்துவதாக ஐதீகம்.

இத்தலத்தில் அணையா விளக்கு இரவு – பகல் என எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும். நூபுர கங்கை என்னும் சிலம்பாறு வற்றாத ஜீவ நதியாகப் பாய்ந்து கொண்டே இருக்கிறது.

தமிழர்களின் சிற்பக் கலைக்குச் சான்றாக விளங்கும் திருக்கோவில்களில் இதுவும் ஒன்று, இங்கு பல அழகிய சிற்பங்கள் கண்களுக்கு விருந்து படைக்கிறது.

விவசாயிகள் விளைச்சல் அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில், விளையும் தானியங்களை அழகருக்கு காணிக்கையாகச் ‌‌செலுத்துவது வழக்கம்.

இவ்வாறு காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி, அதில் திருக்கோவில் சார்பில், தோசை சுட்டுப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இப்படி பல்வேறு சிறப்பு வாய்ந்த இந்த திருக்கோவிலில், கும்பாபிஷேக விழா, விரைவில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. ரூபாய் 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் மகா கும்பாபிஷேகத்திற்கு மதுரை அழகர் கோவில் தயாராகி வருகிறது.

மகா கும்பாபிஷேகத்தை யொட்டி, அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. மகா கும்பாபிஷேக நாளில், பெருமாளின் பரிபூரண அருளைப் பெற பக்தர்கள் பயபக்தியுடன் காத்துள்ளனர்.

Tags: madurai kalazhagarkaruppanna sami
ShareTweetSendShare
Previous Post

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோவிலில் மகா பாலாலயம் பூஜை.

Next Post

அமைச்சர் சேகர் பாபுவை பதவி நீக்கவேண்டும்! – இந்து முன்னணி தலைவர் கோரிக்கை

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies