கும்பாபிஷேகத்திற்குத் தயாராகும் கள்ளழகர் கோவில்!
Jun 14, 2026, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கும்பாபிஷேகத்திற்குத் தயாராகும் கள்ளழகர் கோவில்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 4, 2023, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை என்று சொன்னாலே முதலில் ஞாபத்திற்கு வருவது கள்ளழகர் திருக்கோவில்தான்.

மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அழகர் திருக்கோவில். இந்த திருக்கோவில், மலை மீது அமைந்துள்ளதால், அழகர் கோவில் என்றும், இந்த மலையைச் சோலை மலை என்றும் பக்தர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

இங்கு, சங்கு, சக்கரம், கதை, வில், வாள் ஆகியவைகளைத் தாங்கிய நிலையில் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.

அதபோல, மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள், இங்கு அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பு.

பெரியாழ்வார், ஆண்டாள், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் என 6 ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற சிறப்பு மிக்க திவ்ய தேசமாகும்.

இத்தலத்தில் காவல் தெய்வமாகக் காட்சி தரும் கருப்பண்ண சுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவர் என போற்றப்படுகிறார்.

பதினெட்டாம் படியான் என்றும் பக்தர்களால் அன்போடு அழைப்படும் இவரைக் கும்பிட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது பக்கத்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

பெருமாள் மீது எமதர்மராஜன் மிகுந்த பக்தி கொண்டவர். ஒருமுறை, அவரது பக்தியை மெச்சிய பெருமாள், அவருக்கு நேரில் அருட்காட்சி கொடுத்தார்.

அப்போது, அவர், பெருமாளிடம் தினந்தோறும் ஒரு மு‌றையாவது பூஜை செய்ய வரம் வேண்டும் என்று கேட்க, அதன்படியே பெருமாளும் வரம் அருளினார். இதனால், இங்கு ஒவ்வொரு நாளும் நடக்கும் அர்த்த ஜாம பூஜையை எமதர்மராஜனே நடத்துவதாக ஐதீகம்.

இத்தலத்தில் அணையா விளக்கு இரவு – பகல் என எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும். நூபுர கங்கை என்னும் சிலம்பாறு வற்றாத ஜீவ நதியாகப் பாய்ந்து கொண்டே இருக்கிறது.

தமிழர்களின் சிற்பக் கலைக்குச் சான்றாக விளங்கும் திருக்கோவில்களில் இதுவும் ஒன்று, இங்கு பல அழகிய சிற்பங்கள் கண்களுக்கு விருந்து படைக்கிறது.

விவசாயிகள் விளைச்சல் அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில், விளையும் தானியங்களை அழகருக்கு காணிக்கையாகச் ‌‌செலுத்துவது வழக்கம்.

இவ்வாறு காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி, அதில் திருக்கோவில் சார்பில், தோசை சுட்டுப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இப்படி பல்வேறு சிறப்பு வாய்ந்த இந்த திருக்கோவிலில், கும்பாபிஷேக விழா, விரைவில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. ரூபாய் 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் மகா கும்பாபிஷேகத்திற்கு மதுரை அழகர் கோவில் தயாராகி வருகிறது.

மகா கும்பாபிஷேகத்தை யொட்டி, அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. மகா கும்பாபிஷேக நாளில், பெருமாளின் பரிபூரண அருளைப் பெற பக்தர்கள் பயபக்தியுடன் காத்துள்ளனர்.

Tags: madurai kalazhagarkaruppanna sami
ShareTweetSendShare
Previous Post

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோவிலில் மகா பாலாலயம் பூஜை.

Next Post

அமைச்சர் சேகர் பாபுவை பதவி நீக்கவேண்டும்! – இந்து முன்னணி தலைவர் கோரிக்கை

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies