திமுக ஒழிய போகிறது !-ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்
Jul 8, 2025, 06:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஒழிய போகிறது !-ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்

சனாதனத்தை ஒழிப்பேன் என்பதில் உறுதியாக இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளது, திமுக ஒழிய போகின்றது என்பதையே காட்டுகின்றது.

Web Desk by Web Desk
Sep 4, 2023, 04:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேசத்தின் முன்னேற்றத்தை விரைவுப்படுத்தும் என ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழகம் வருகை தந்தார். இன்று கோவையிலிருந்து அவர் மீண்டும் ஜார்க்கண்ட் மாநிலத்திற்குப் புறப்பட்டார்.

முன்னதாக, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜாதிகளில், உயர்வு தாழ்வு என்பதை இந்து மதமோ, சனாதன தர்மமோ வலியுறுத்தவில்லை. சிலர், தவறாக பிரச்சாரம் செய்கின்றனர்.

காலம் காலமாக இருக்கின்ற பாரம்பரியத்தைக் குறை சொல்வது என்பது திமுகவிற்கு வாடிக்கையாகி விட்டது. அவர்கள் இன்னும் 1,952 லேயே இருக்கிறார்கள். காலம் மாறி வருகிறது. பாரம்பரியமும், பெருமையும் காக்கப்பட வேண்டும் என தமிழர்கள் விரும்புகின்றார்கள்.

தேவையில்லாதவற்றைத் தொடாமல் தமிழகத்தின் முன்னேற்றத்தில் திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும். அதுதான், திமுகவிற்கும் நல்லது தமிழகத்திற்கும் நல்லது.

சனாதனத்தை ஒழிப்பேன் என்பதில் உறுதியாக இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளது, திமுக ஒழிய போகின்றது என்பதையே காட்டுகின்றது.

திமுக அரசு தமிழக ஆளுநரிடம் பகை வளர்த்துக் கொண்டிருக்கிறது. காசு எதிர்பார்க்காத நல்ல ஆளுநர் தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறார். இதைவிட என்ன வேண்டும் இவர்களுக்கு.

தமிழ் மீதும், தமிழர் மீதும், தமிழகத்தின் மீதும் அக்கறை கொண்டிருக்கக் கூடிய ஒறஉ ஆளுநர் கிடைத்திருக்கிறார்.

அரசியல் சாசனத்தில் எது சொல்லப்பட்டு இருக்கிறதோ , உச்ச நீதிமன்றத்தில் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு எது இருக்கிறதோ அது மட்டும் தான் கவர்னரால் செய்ய முடியும். அரசிய்வாதிகளின் சொல்படி எல்லாம் செய்ய முடியாது.

அடிக்கடி தேர்தல் வந்தால் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பாதிக்கும். எனவே, ஒரே நேரத்தில் எல்லா அமைப்புகளுக்கும் தேர்தல் வந்தால், தேசத்திற்கு முன்னேற்றம் கிடைக்கும். ஒரே நாடு ஒரே தேர்தலில் என்ன குறை கண்டு இவர்கள் வேண்டாம் என்று சொல்கிறார்கள் என தெரியவில்லை.

இந்தியா கூட்டணி பலமில்லாத கூட்டணி. மக்கள் விரோத கூட்டணி. மக்கள் ஆதரவு இல்லாத கூட்டணி. அந்த கூட்டணியில் உள்ள தலைவர்களை எப்படி எதிர்கொள்வது என்பது மோடி, அமித்ஷா ஆகியோருக்கு தெரியும்.

சந்திராயன் விண்கலத்தைத் தொடர்ந்து சூரிய ஆராய்ச்சிக்காக ஆதித்யா விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. விஞ்ஞான ரீதியாக இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த வளர்ச்சி மேலும்மேலும் அடைய வேண்டும் என்பது தான் ஒவ்வொரு இந்தியரின் விருப்பம் என்றார்.

Tags: cp radhakarishnanjharkand governer
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் கூலிப்படை அட்டகாசம் அதிகரிப்பு ! – அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

Next Post

பிரதமர் ஆலோசனைகளை வழங்கினார்!-பிரக்ஞானந்தா

Related News

கட்டுப்பாட்டை இழக்கும் சீன அதிபர் : பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்காத பின்னணி!

அரிய தனிமங்களுக்கு கொடுத்த விலை : பூமியின் நரகமாக மாறிய சீன நகரம்!

“தமிழகத்தை மீட்போம்” – தாக்கத்தை ஏற்படுத்துமா EPS சுற்றுப்பயணம்?

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

பம்பரமாக சுழலும் பேப்பர் தாத்தா : 94 வயதிலும் அசராத பணி – உழைப்புக்கு முன்னுதாரணம்!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட திமுக அரசு மாணவர் நலனுக்காக செலவிடவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

தமிழகத்தில் விடுதிகளின் பெயரை மாற்றுவதால் மட்டும் எதுவும் நடக்கப் போவதில்லை : எல்.முருகன்

அஜித் குமார் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரணை!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

கைதிகளை சித்ரவதை செய்து விசாரிப்பது அவசியம் – தமிழ்நாட்டில் 91% காவலர்கள் ஆதரவு!

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், வலிமையும் நிரூபிக்கப்பட்டுள்ளது : ராஜ்நாத் சிங்

எழில் கொஞ்சும் மெரினா கடற்கரை : நீலக்கொடி அந்தஸ்து பெற தீவிர முயற்சி!

நாமக்கல்லில் ZAAROZ செயலியை தொடங்கிய ஹோட்டல் உரிமையாளர்கள்!

S.J.சூர்யாவின் கில்லர் படத்திற்கு இசையமைக்கும் A.R.ரஹ்மான்!

புரி ஜெகநாத் – விஜய் சேதுபதி கூட்டணியில் படப்பிடிப்பு தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies