திமுகவினரால் வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட ஜெகன் பாண்டியன் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
திமுகவினரால் வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட திருநெல்வேலி வடக்கு மாவட்ட தமிழக பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் சகோதரர் ஜெகன் பாண்டியன் இல்லத்துக்குச் சென்று, அவரது தாயாருக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தோம்.
திமுகவினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட திருநெல்வேலி வடக்கு மாவட்ட @BJP4Tamilnadu இளைஞரணி பொதுச் செயலாளர் சகோதரர் ஜெகன் பாண்டியன் அவர்கள் இல்லத்துக்குச் சென்று, அவரது தாயாருக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தோம்.
சகோதரர் ஜெகன்பாண்டியன் இழப்பு, கட்சிக்கும்… pic.twitter.com/OxAXIAsU1M
— K.Annamalai (@annamalai_k) September 4, 2023
சகோதரர் ஜெகன்பாண்டியன் இழப்பு, கட்சிக்கும் சமூகத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. சகோதரர் ஜெகன்பாண்டியன் குடும்பத்தினருடன், தமிழக பாஜக என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும், சகோதரர் ஜெகன்பாண்டியன் இடத்திலிருந்து தமிழக பாஜக சார்பாக, அவரது தாயாருக்குச் செய்ய வேண்டிய கடமையாக, வீடு கட்டித் தருவோம் என்றும் உறுதியளித்தோம்.
சகோதரர் ஜெகன்பாண்டியனைக் கடந்த மாதம், என் மண் என் மக்கள் பயணத்தில் சந்தித்தபோது, கட்சிப் பணிகளிலும் சமூகப் பணிகளிலும் அவரது சுறுசுறுப்பும், நற்பண்புகளும் என்னைக் கவர்ந்தது.
பொதுமக்களிடையேயும் அவரது அயராத சமூகப் பணிகள் மூலம் குறிப்பிடத்தக்க இடம் பிடித்திருந்தார். அவர் வளர்ச்சியைக் கண்டு பயந்த திமுக, அவரை வன்முறையால் வீழ்த்தியிருக்கிறது. அவர் மரணத்துக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் எங்கே இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்துத் தப்பிக்க முடியாது என்பதைக் கூறிக் கொள்கிறேன், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.