ஆசிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, நேற்று நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.
நேபாளத்துக்கு எதிராக பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற இந்திய போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வுசெய்தது.
பேட்டிங் செய்த நேபாள அணி 48.2 ஓவர்களில் 230 ரன்கள் குவித்தது. நேபாள அணி சார்பில் அதிகபட்சமாக ஆசிஃப் ஷேக் 58 ரன்களும், சோம்பால் கமி 48 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் சிராஜ் மற்றும் ஜடேஜா இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்திய அணியின் வலிமையான பந்துவீச்சுக்கு எதிரான நேபாள அணி 230 ரன்கள் குவித்தது இரசிகர்களைத் திரும்பி பார்க்க வைத்தது.
பின்னர் 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினார்கள். இருவரும் தங்களது ஆட்டத்தை தொடங்கிய போது மழையும் தொடங்கியது. இதனால் 2.1 வது ஓவரில் 17 ரன்களுக்கு ஆட்டம் தடைப்பட்டது.
பிறகு மழை நின்றவுடன் 10:15 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. அப்போது டிஎல்எஸ் விதிமுறைப்படி இந்திய அணி 23 ஓவர்களில் 145 ரன்கள் சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன் பிறகு களமிறங்கிய ரோஹித் மற்றும் கில் இருவரும் தங்களது அதிரடியான ஆட்டத்தை ஆடினார்கள். சுப்மன் கில் பௌண்டரிகளாக அடிக்க ரோஹித் சர்மா சிக்சர்களாக அடித்தார், இவர்கள் இருவரும் கடைசிவரை ஆட்டம் இழக்காமல் விளையாட இந்திய அணி 20 ஓவர் முடிவில் 147 ரன்களை பெற்று 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 74(58) ரன்களும், சுப்மன் கில் 67(62) ரன்களும் எடுத்தனர்.
இதன் மூலம் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிப்பெற்றது. இதனால் செப்டம்பர் 12 ஆம் தேதி சூப்பர் 4 சுற்றில் இந்தியா அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் ரோஹித் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.