ஜி 20 உச்சிமாநாட்டில் சர்வதேச ஊடக மையம் : அனுராக் தாக்கூர் ஆய்வு!
Oct 3, 2025, 09:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜி 20 உச்சிமாநாட்டில் சர்வதேச ஊடக மையம் : அனுராக் தாக்கூர் ஆய்வு!

Web Desk by Web Desk
Sep 6, 2023, 10:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 சர்வதேச ஊடக மையத்திற்குச் சென்று ஜி 20 தலைவர்கள் உச்சிமாநாட்டிற்கான தயார்நிலை மற்றும் ஏற்பாடுகள் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர்அனுராக் தாக்கூர்  இன்றுஆய்வு செய்தார்.

புதுதில்லியில் செப்டம்பர் 9 முதல் 10 வரை நடைபெறும் உச்சிமாநாட்டிற்கான இடமாக பாரத் மண்டபம் இருக்கும். ஆய்வில் பங்கேற்க வந்த அமைச்சர் எம்.சி.ஆர், ஸ்டுடியோ, பி.சி.ஆர், பி.கியூ.ஆர் மற்றும் சமூக ஊடக அறை ஆகியவற்றை பார்வையிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தாக்கூர்,

ஜி 20 தலைவர்கள் உச்சிமாநாட்டை நடத்துவதில் இந்தியா உற்சாகமாக உள்ளது. இந்தியா முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடைபெற்றுள்ளதாகவும், அதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.  தலைவர்கள் உச்சிமாநாடு வரலாறு படைக்கும் என்று தான் நம்புவதாக கூறினார்.

இது உலகத் தரம் வாய்ந்த வசதிகளைக் கொண்டுள்ளது. இது புதிய இந்தியாவின் சக்தியைக் காட்டுகிறது. இந்தியாவின் கலை மற்றும் கலாச்சார பிரதிகள் சுவர்களை அலங்கரிக்கின்றன. மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தை ஒட்டி இந்த ஊடக மையம் உள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்புகளுக்கான முக்கிய ஊடக மையம், ஹிமாலயா என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் 300 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இடமளிக்க முடியும் என்று தெரிவித்தார்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைக்காக இந்தியா உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இந்த தொழில்நுட்பத் திறன் இங்குள்ள அரங்குகளில் காட்சிப்படுத்தப்படும் என்று கூறினார்.

“உச்சிமாநாட்டின் போது இந்தியா தனது வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும், அதே நேரத்தில் ஒரு புதிய இந்தியாவின் உயர்ந்த பிம்பத்தை முன்வைக்கும்” என்று கூறினார்.

ஜி 20 உலகெங்கிலும் உள்ள ஊடகவியலாளர்களின் மிகப்பெரிய கூட்டத்தைக் காணும். உலகெங்கிலும் உள்ள ஊடக சகோதரத்துவத்தை அன்புடன் வரவேற்றார்.

இந்த நிகழ்வை ஒளிபரப்புவதற்காக விரிவான அமைப்பை உருவாக்கியதற்காக  தூர்தர்ஷனைப் பாராட்டிய அவர், விமான நிலையம் முதல் பாரத் மண்டபம் வரை பல்வேறு இடங்களில் 78 க்கும் மேற்பட்ட யு.எச்.டி மற்றும் 4 கே கேமராக்கள் நிறுவப்பட்டதில் தூர்தர்ஷன் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்றார். அனைத்து ஊடகங்களுக்கும் தெளிவான படங்கள், வீடியோக்கள் வழங்கப்படும் என்றும் கூறினார்.

Tags: Anurag Thakurg 20
ShareTweetSendShare
Previous Post

இந்து வேதங்களில் பெண்களுக்கே அதிக உரிமை! – ராஜ்நாத் சிங் பேச்சு

Next Post

தேசிய நல்லாசிரியர் விருதுகளைக் குடியரசுத் தலைவர் வழங்கினார்!

Related News

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

Load More

அண்மைச் செய்திகள்

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies