மலிவு விலை மின்சாரத் திட்டத்துக்கு ரூ.9,400 கோடி!
Jul 27, 2025, 11:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மலிவு விலை மின்சாரத் திட்டத்துக்கு ரூ.9,400 கோடி!

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி ஒதுக்க ஒப்புதல்!

Web Desk by Web Desk
Sep 7, 2023, 12:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டு மக்களுக்கு சுத்தமான, நம்பகமான மற்றும் மலிவுவிலையில் மின்சாரம் வழங்குவதற்கு தொடக்க ஒதுக்கீடாக 9,400 கோடி ரூபாய் வழங்குவது உட்பட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு மே மாதம் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க.வும், எதிர்கட்சியான காங்கிரஸும் தேர்தல் யுத்திகள், வியூகங்கள் வகுப்பது உட்பட பல்வேறு விவகாரங்களில் தீவிரமாக களமிறங்கி இருக்கின்றன. அந்த வகையில், ஆளும் பா.ஜ.க., மத்திய அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியது. இக்கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

அந்தவகையில், பேட்டர் எரிசக்தி சேமிப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்கான சாத்திக்கூறு இடைவெளி நிதித் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. 2030-31-ம் ஆண்டுக்குள் 4,000 மெகாவாட் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புத் திட்டங்களை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. சூரியசக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் திறனை பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட இத்திட்டம், நாட்டு மக்களுக்கு மலிவு விலையில் மின்சாரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

இத்திட்டத்திற்கு 9,400 கோடி தொடக்க ஒதுக்கீட்டில், 3,760 கோடி ரூபாய் வரவு செலவுத் திட்ட உதவியாக சாத்தியக்கூறு இடைவெளி நிதி வடிவத்தில் நிதியுதவி அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புத் திட்டத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறு இடைவெளி நிதித்திட்டம், நிலையான எரிசக்தி தீர்வுகளுக்கான அரசின் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது. இத்திட்டத்தின் மூலம் 1 கிலோவாட் மணி நேரத்துக்கு 5.50 முதல் 6.60 ரூபாய் வரை சமநிலைப்படுத்தப்பட்ட சேமிப்பு செலவை அடைய முடியும்.

மேலும், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுக்கான தொழில்துறை மேம்பாட்டுத் திட்டம் 2017-க்கு 1164.53 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யவும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்த நிதி ஒதுக்கீடு 131.90 கோடி ரூபாயாகும். இந்த நிதி 2021-22-ம் நிதியாண்டில் செலவழிக்கப்பட்டது. மேலும், 2028-2029-ம் ஆண்டு வரை உறுதியளிக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்ற கூடுதல் நிதித் தேவை 1,164.53 கோடி ரூபாயாகும். இக்கூடுதல் நிதியை தொழில் வளர்ச்சித் திட்டம் 2017-ன் கீழ் ஒதுக்க, மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கோரப்பட்டது.

அந்த வகையில், இரு மாநிலங்களிலும் அமைந்துள்ள உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் கணிசமான அளவில் விரிவடைந்துள்ள அனைத்துத் தகுதி வாய்ந்த புதிய தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்கெனவே உள்ள தொழில் நிறுவனங்களுக்கு, ஆலை மற்றும் இயந்திரங்களுக்கான முதலீட்டில் 30% மத்திய மூலதன முதலீட்டு ஊக்கத்தொகை 5 கோடி ரூபாய் என்கிற உச்ச வரம்புடன் வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

Tags: PM Modicentral government cabinet meeting
ShareTweetSendShare
Previous Post

சனாதன தேர்தலாக சந்தித்துக்கொள்ளலாமா?- ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால் !

Next Post

வான்வெளியில் மற்றொரு பூமி!

Related News

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

திமுக ஆட்சியில் கட்டியதை விட, இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்களே அதிகம் – அண்ணாமலை

திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்கும், ஆனால் சமூக நீதி கிடைக்காது – அன்புமணி விமர்சனம்

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies