மலிவு விலை மின்சாரத் திட்டத்துக்கு ரூ.9,400 கோடி!
Sep 12, 2026, 10:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மலிவு விலை மின்சாரத் திட்டத்துக்கு ரூ.9,400 கோடி!

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி ஒதுக்க ஒப்புதல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 7, 2023, 12:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டு மக்களுக்கு சுத்தமான, நம்பகமான மற்றும் மலிவுவிலையில் மின்சாரம் வழங்குவதற்கு தொடக்க ஒதுக்கீடாக 9,400 கோடி ரூபாய் வழங்குவது உட்பட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு மே மாதம் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க.வும், எதிர்கட்சியான காங்கிரஸும் தேர்தல் யுத்திகள், வியூகங்கள் வகுப்பது உட்பட பல்வேறு விவகாரங்களில் தீவிரமாக களமிறங்கி இருக்கின்றன. அந்த வகையில், ஆளும் பா.ஜ.க., மத்திய அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியது. இக்கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

அந்தவகையில், பேட்டர் எரிசக்தி சேமிப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்கான சாத்திக்கூறு இடைவெளி நிதித் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. 2030-31-ம் ஆண்டுக்குள் 4,000 மெகாவாட் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புத் திட்டங்களை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. சூரியசக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் திறனை பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட இத்திட்டம், நாட்டு மக்களுக்கு மலிவு விலையில் மின்சாரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

இத்திட்டத்திற்கு 9,400 கோடி தொடக்க ஒதுக்கீட்டில், 3,760 கோடி ரூபாய் வரவு செலவுத் திட்ட உதவியாக சாத்தியக்கூறு இடைவெளி நிதி வடிவத்தில் நிதியுதவி அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புத் திட்டத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறு இடைவெளி நிதித்திட்டம், நிலையான எரிசக்தி தீர்வுகளுக்கான அரசின் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது. இத்திட்டத்தின் மூலம் 1 கிலோவாட் மணி நேரத்துக்கு 5.50 முதல் 6.60 ரூபாய் வரை சமநிலைப்படுத்தப்பட்ட சேமிப்பு செலவை அடைய முடியும்.

மேலும், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுக்கான தொழில்துறை மேம்பாட்டுத் திட்டம் 2017-க்கு 1164.53 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யவும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்த நிதி ஒதுக்கீடு 131.90 கோடி ரூபாயாகும். இந்த நிதி 2021-22-ம் நிதியாண்டில் செலவழிக்கப்பட்டது. மேலும், 2028-2029-ம் ஆண்டு வரை உறுதியளிக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்ற கூடுதல் நிதித் தேவை 1,164.53 கோடி ரூபாயாகும். இக்கூடுதல் நிதியை தொழில் வளர்ச்சித் திட்டம் 2017-ன் கீழ் ஒதுக்க, மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கோரப்பட்டது.

அந்த வகையில், இரு மாநிலங்களிலும் அமைந்துள்ள உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் கணிசமான அளவில் விரிவடைந்துள்ள அனைத்துத் தகுதி வாய்ந்த புதிய தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்கெனவே உள்ள தொழில் நிறுவனங்களுக்கு, ஆலை மற்றும் இயந்திரங்களுக்கான முதலீட்டில் 30% மத்திய மூலதன முதலீட்டு ஊக்கத்தொகை 5 கோடி ரூபாய் என்கிற உச்ச வரம்புடன் வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

Tags: PM Modicentral government cabinet meeting
Share
Tweet
SendShare
Previous Post

சனாதன தேர்தலாக சந்தித்துக்கொள்ளலாமா?- ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால் !

Next Post

வான்வெளியில் மற்றொரு பூமி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies