திமுக ஆதரவாளர்களுக்கு மட்டுமே அழைப்பு –விவசாயிகள் குமுறல்!
Jan 14, 2026, 09:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

திமுக ஆதரவாளர்களுக்கு மட்டுமே அழைப்பு –விவசாயிகள் குமுறல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 7, 2023, 04:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சையில், வேளாண் உற்பத்தி ஆணையர் ஆய்வுக்கு வந்தபோது, திமுகவைச் சேர்ந்த ஆதரவு விவசாய சங்க நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்டா மாவட்டங்களான, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில், குறுவை மற்றம் சம்பா நெற்பயிர் சாகுபடி குறித்து வேளாண் உற்பத்தி ஆணையர் ஆய்வு செய்வது வழக்கம்.

குறிப்பாக, தஞ்சை மாவட்டத்தில் கரம்பை, இராமநாதபுரம், பருத்திக்கோட்டை, தென்னமநாடு, வெட்டிக்காடு ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை, சம்பா மற்றும் மாற்றுப் பயிர்களின் நிலை குறித்து வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

ஆனால், வேளாண் உற்பதி ஆணையர் வருகை தருவது குறித்து உண்மயான விவசாய சங்க நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

மாறாக, அந்தந்த பகுதியில் உள்ள ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ள விவசாய சங்க நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், உண்மையான விவசாய சங்க தலைவர்கள் புறக்கணிப்பட்டுள்ளனர். விவசாயிகளின் உண்மையானப் பிரச்சினைகளை அரசிடம் கொண்டு செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

இது குறித்து, காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலாளர் விமலநாதன் கூறுகையில், விவசாயிகளுக்கு எது மாதிரி பிரச்சினை ஏற்படுகிறது, அவை எப்படி ஏற்படுகிறது. அதனைத் தீர்க்க என்ன வழி என்பது குறித்த தகவலை, உயர் அதிகாரிகளுக்கு கொண்டு சென்றால்தான், அவர்கள் மூலம் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

ஆனால், விவசாயிகளின் உண்மையான பிரச்சினை அரசுக்குத் தெரியக்கூடாது என்று நினைக்கும் சிலரால் ஆளுங்கட்சிக்கு சாதகமான சங்க நிர்வாகிகளை மட்டும் அழைத்து வந்து விவசாயிகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது போல் காட்ட முயற்சி செய்கின்றனர்.

அதேபோல், வேளாண் ஆணையரும் முறையான அறிவிப்பு கொடுக்காமல் வருகை தந்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் குறுவையும், சம்பாவும் விவசாயிகளுக்கு எந்த வகையிலும் பலன் கொடுக்கவில்லை.

அதேபோல், வேளாண் உயர் அதிகாரிகளும் விவசாயிகளின் நலனை பேனி காப்பதற்குப் பதில், நழுவிச் செல்கின்றனர்.

வேளாண் ஆய்வுக்கு வரும் உயர் அதிகாரிகள், அனைத்து விவசாயச் சங்க நிர்வாகிகளுக்கு முறையான அழைப்பு விடுக்கவேண்டும். அனைவரது ஆலோசனையும் கேட்டு, நல்ல முடிவு எடுக்க வேண்டும். ஆளும் கட்சியினர் மட்டும் கூறுவதை மட்டும் ஏற்ககூடாது. அப்படி செய்தால், அது, உண்மையான விவசாயிகளுக்கு செய்யும் துரோகமாகும் என்றார்.

Tags: agriculture
ShareTweetSendShare
Previous Post

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி – மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்!

Next Post

கடிதம் மூலம் தலாக் – கணவன் மீது போலீசார் வழக்கு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies