திமுக ஆதரவாளர்களுக்கு மட்டுமே அழைப்பு –விவசாயிகள் குமுறல்!
Jul 25, 2025, 07:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

திமுக ஆதரவாளர்களுக்கு மட்டுமே அழைப்பு –விவசாயிகள் குமுறல்!

Web Desk by Web Desk
Sep 7, 2023, 04:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சையில், வேளாண் உற்பத்தி ஆணையர் ஆய்வுக்கு வந்தபோது, திமுகவைச் சேர்ந்த ஆதரவு விவசாய சங்க நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்டா மாவட்டங்களான, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில், குறுவை மற்றம் சம்பா நெற்பயிர் சாகுபடி குறித்து வேளாண் உற்பத்தி ஆணையர் ஆய்வு செய்வது வழக்கம்.

குறிப்பாக, தஞ்சை மாவட்டத்தில் கரம்பை, இராமநாதபுரம், பருத்திக்கோட்டை, தென்னமநாடு, வெட்டிக்காடு ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை, சம்பா மற்றும் மாற்றுப் பயிர்களின் நிலை குறித்து வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

ஆனால், வேளாண் உற்பதி ஆணையர் வருகை தருவது குறித்து உண்மயான விவசாய சங்க நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

மாறாக, அந்தந்த பகுதியில் உள்ள ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ள விவசாய சங்க நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், உண்மையான விவசாய சங்க தலைவர்கள் புறக்கணிப்பட்டுள்ளனர். விவசாயிகளின் உண்மையானப் பிரச்சினைகளை அரசிடம் கொண்டு செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

இது குறித்து, காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலாளர் விமலநாதன் கூறுகையில், விவசாயிகளுக்கு எது மாதிரி பிரச்சினை ஏற்படுகிறது, அவை எப்படி ஏற்படுகிறது. அதனைத் தீர்க்க என்ன வழி என்பது குறித்த தகவலை, உயர் அதிகாரிகளுக்கு கொண்டு சென்றால்தான், அவர்கள் மூலம் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

ஆனால், விவசாயிகளின் உண்மையான பிரச்சினை அரசுக்குத் தெரியக்கூடாது என்று நினைக்கும் சிலரால் ஆளுங்கட்சிக்கு சாதகமான சங்க நிர்வாகிகளை மட்டும் அழைத்து வந்து விவசாயிகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது போல் காட்ட முயற்சி செய்கின்றனர்.

அதேபோல், வேளாண் ஆணையரும் முறையான அறிவிப்பு கொடுக்காமல் வருகை தந்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் குறுவையும், சம்பாவும் விவசாயிகளுக்கு எந்த வகையிலும் பலன் கொடுக்கவில்லை.

அதேபோல், வேளாண் உயர் அதிகாரிகளும் விவசாயிகளின் நலனை பேனி காப்பதற்குப் பதில், நழுவிச் செல்கின்றனர்.

வேளாண் ஆய்வுக்கு வரும் உயர் அதிகாரிகள், அனைத்து விவசாயச் சங்க நிர்வாகிகளுக்கு முறையான அழைப்பு விடுக்கவேண்டும். அனைவரது ஆலோசனையும் கேட்டு, நல்ல முடிவு எடுக்க வேண்டும். ஆளும் கட்சியினர் மட்டும் கூறுவதை மட்டும் ஏற்ககூடாது. அப்படி செய்தால், அது, உண்மையான விவசாயிகளுக்கு செய்யும் துரோகமாகும் என்றார்.

Tags: agriculture
ShareTweetSendShare
Previous Post

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி – மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்!

Next Post

கடிதம் மூலம் தலாக் – கணவன் மீது போலீசார் வழக்கு!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies