திமுக ஆதரவாளர்களுக்கு மட்டுமே அழைப்பு –விவசாயிகள் குமுறல்!
Jul 28, 2026, 09:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

திமுக ஆதரவாளர்களுக்கு மட்டுமே அழைப்பு –விவசாயிகள் குமுறல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 7, 2023, 04:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சையில், வேளாண் உற்பத்தி ஆணையர் ஆய்வுக்கு வந்தபோது, திமுகவைச் சேர்ந்த ஆதரவு விவசாய சங்க நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்டா மாவட்டங்களான, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில், குறுவை மற்றம் சம்பா நெற்பயிர் சாகுபடி குறித்து வேளாண் உற்பத்தி ஆணையர் ஆய்வு செய்வது வழக்கம்.

குறிப்பாக, தஞ்சை மாவட்டத்தில் கரம்பை, இராமநாதபுரம், பருத்திக்கோட்டை, தென்னமநாடு, வெட்டிக்காடு ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை, சம்பா மற்றும் மாற்றுப் பயிர்களின் நிலை குறித்து வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

ஆனால், வேளாண் உற்பதி ஆணையர் வருகை தருவது குறித்து உண்மயான விவசாய சங்க நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

மாறாக, அந்தந்த பகுதியில் உள்ள ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ள விவசாய சங்க நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், உண்மையான விவசாய சங்க தலைவர்கள் புறக்கணிப்பட்டுள்ளனர். விவசாயிகளின் உண்மையானப் பிரச்சினைகளை அரசிடம் கொண்டு செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

இது குறித்து, காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலாளர் விமலநாதன் கூறுகையில், விவசாயிகளுக்கு எது மாதிரி பிரச்சினை ஏற்படுகிறது, அவை எப்படி ஏற்படுகிறது. அதனைத் தீர்க்க என்ன வழி என்பது குறித்த தகவலை, உயர் அதிகாரிகளுக்கு கொண்டு சென்றால்தான், அவர்கள் மூலம் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

ஆனால், விவசாயிகளின் உண்மையான பிரச்சினை அரசுக்குத் தெரியக்கூடாது என்று நினைக்கும் சிலரால் ஆளுங்கட்சிக்கு சாதகமான சங்க நிர்வாகிகளை மட்டும் அழைத்து வந்து விவசாயிகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது போல் காட்ட முயற்சி செய்கின்றனர்.

அதேபோல், வேளாண் ஆணையரும் முறையான அறிவிப்பு கொடுக்காமல் வருகை தந்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் குறுவையும், சம்பாவும் விவசாயிகளுக்கு எந்த வகையிலும் பலன் கொடுக்கவில்லை.

அதேபோல், வேளாண் உயர் அதிகாரிகளும் விவசாயிகளின் நலனை பேனி காப்பதற்குப் பதில், நழுவிச் செல்கின்றனர்.

வேளாண் ஆய்வுக்கு வரும் உயர் அதிகாரிகள், அனைத்து விவசாயச் சங்க நிர்வாகிகளுக்கு முறையான அழைப்பு விடுக்கவேண்டும். அனைவரது ஆலோசனையும் கேட்டு, நல்ல முடிவு எடுக்க வேண்டும். ஆளும் கட்சியினர் மட்டும் கூறுவதை மட்டும் ஏற்ககூடாது. அப்படி செய்தால், அது, உண்மையான விவசாயிகளுக்கு செய்யும் துரோகமாகும் என்றார்.

Tags: agriculture
ShareTweetSendShare
Previous Post

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி – மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்!

Next Post

கடிதம் மூலம் தலாக் – கணவன் மீது போலீசார் வழக்கு!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies