திமுக ஆதரவாளர்களுக்கு மட்டுமே அழைப்பு –விவசாயிகள் குமுறல்!
Sep 12, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

திமுக ஆதரவாளர்களுக்கு மட்டுமே அழைப்பு –விவசாயிகள் குமுறல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 7, 2023, 04:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தஞ்சையில், வேளாண் உற்பத்தி ஆணையர் ஆய்வுக்கு வந்தபோது, திமுகவைச் சேர்ந்த ஆதரவு விவசாய சங்க நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்டா மாவட்டங்களான, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில், குறுவை மற்றம் சம்பா நெற்பயிர் சாகுபடி குறித்து வேளாண் உற்பத்தி ஆணையர் ஆய்வு செய்வது வழக்கம்.

குறிப்பாக, தஞ்சை மாவட்டத்தில் கரம்பை, இராமநாதபுரம், பருத்திக்கோட்டை, தென்னமநாடு, வெட்டிக்காடு ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை, சம்பா மற்றும் மாற்றுப் பயிர்களின் நிலை குறித்து வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

ஆனால், வேளாண் உற்பதி ஆணையர் வருகை தருவது குறித்து உண்மயான விவசாய சங்க நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

மாறாக, அந்தந்த பகுதியில் உள்ள ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ள விவசாய சங்க நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், உண்மையான விவசாய சங்க தலைவர்கள் புறக்கணிப்பட்டுள்ளனர். விவசாயிகளின் உண்மையானப் பிரச்சினைகளை அரசிடம் கொண்டு செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

இது குறித்து, காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலாளர் விமலநாதன் கூறுகையில், விவசாயிகளுக்கு எது மாதிரி பிரச்சினை ஏற்படுகிறது, அவை எப்படி ஏற்படுகிறது. அதனைத் தீர்க்க என்ன வழி என்பது குறித்த தகவலை, உயர் அதிகாரிகளுக்கு கொண்டு சென்றால்தான், அவர்கள் மூலம் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

ஆனால், விவசாயிகளின் உண்மையான பிரச்சினை அரசுக்குத் தெரியக்கூடாது என்று நினைக்கும் சிலரால் ஆளுங்கட்சிக்கு சாதகமான சங்க நிர்வாகிகளை மட்டும் அழைத்து வந்து விவசாயிகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது போல் காட்ட முயற்சி செய்கின்றனர்.

அதேபோல், வேளாண் ஆணையரும் முறையான அறிவிப்பு கொடுக்காமல் வருகை தந்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் குறுவையும், சம்பாவும் விவசாயிகளுக்கு எந்த வகையிலும் பலன் கொடுக்கவில்லை.

அதேபோல், வேளாண் உயர் அதிகாரிகளும் விவசாயிகளின் நலனை பேனி காப்பதற்குப் பதில், நழுவிச் செல்கின்றனர்.

வேளாண் ஆய்வுக்கு வரும் உயர் அதிகாரிகள், அனைத்து விவசாயச் சங்க நிர்வாகிகளுக்கு முறையான அழைப்பு விடுக்கவேண்டும். அனைவரது ஆலோசனையும் கேட்டு, நல்ல முடிவு எடுக்க வேண்டும். ஆளும் கட்சியினர் மட்டும் கூறுவதை மட்டும் ஏற்ககூடாது. அப்படி செய்தால், அது, உண்மையான விவசாயிகளுக்கு செய்யும் துரோகமாகும் என்றார்.

Tags: agriculture
Share
Tweet
SendShare
Previous Post

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி – மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்!

Next Post

கடிதம் மூலம் தலாக் – கணவன் மீது போலீசார் வழக்கு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies