திருமலை நடைபாதை : கைத்தடிகள் விநியோகம்!
Jul 25, 2025, 08:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

திருமலை நடைபாதை : கைத்தடிகள் விநியோகம்!

Web Desk by Web Desk
Sep 8, 2023, 12:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அலிபிரி நடைபாதை வழியாக திருமலைக்கு மலையேற்றம் செல்லும் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம், மரக் குச்சிகளை விநியோகம் செய்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது.

TTD அறக்கட்டளை வாரியத் தலைவர் பூமனா கருணாகர ரெட்டி மற்றும் நிர்வாக அதிகாரி எ.வி. தர்மா ரெட்டி ஆகியோர் புதன்கிழமை அலிபிரி பாதலா மண்டபத்தில் பக்தர்களுக்கு குச்சிகளை வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கினர். கடந்த மாதம் சிறுத்தை தாக்கி ஆறு வயது சிறுவனின் உயிரை பறித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பூமனா, வன விலங்குகளின் தாக்குதலுக்கு எதிராக பக்தர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் தற்காப்புப் பயிற்சியின் ஒரு பகுதியே இது. மேலும் இரண்டு சிறுத்தைகளின் நடமாட்டம் கேமராக்கள் மூலம் படம்பிடிக்கப்பட்ட நாளில் TTD சேர்மன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

காட்டு விலங்குகளின் தாக்குதலைத் தடுக்க TTD யின் முயற்சிகளைப் பற்றி பூமனா குறிப்பிடுகையில், “பக்தர்களின் பாதுகாப்புக் கருத்தி குழுக்களாக பக்தர்களை அனுப்பி அவர்களுடன் காவலர்களும் அனுப்பப்பட்டன, மேலும் காட்டு விலங்குகள் இருக்கும் பகுதிகளில் காவலர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நடவடிக்கைகள் நான்கு சிறுத்தைகளை பிடிக்க உதவியுள்ளது” என்று கூறினார்.

ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோவிலுக்கு வந்த பிறகு பக்தர்களிடமிருந்து மரக் குச்சிகள் திரும்பப் பெறப்படும். யாத்திரையின் போது ஒவ்வொரு பக்தரும் பாதுகாப்பாக உணருவதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம், என்று TTD தலைவர் வலியுறுத்தினார்.

சிறுத்தைகள் நடமாடியது குறித்து தர்மா ரெட்டி கூறுகையில், “ஏழாவது மைல் பாயின்ட் மற்றும் சிலாதோரணம் அருகே இரண்டு பெரிய பூனைகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு இடங்களிலும் விலங்குகளைப் பிடிக்க கூண்டுகள் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளன.

இதையொட்டி, அலிபிரி நடைபாதையில் பாதுகாப்புப் பணியாளர்களுடன் பக்தர்கள் குழுவாகச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஒளிபரப்பு அமைப்பு மூலம் வனவிலங்கு செயல்பாடு குறித்து பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறையும் 100 பணியாளர்களை நியமித்துள்ளது, என EO விளக்கினார்.

இதற்கிடையில், ஒதுக்கப்பட்ட வன மண்டலத்தில் வரும் அலிபிரி நடைபாதையில் இரும்பு வேலி அமைப்பதற்கான பரிந்துரைகளை TTD இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் மத்திய வன அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது.

Tags: tirupathi tirumalaitiruppati templetirupathi
ShareTweetSendShare
Previous Post

இவர்கள் இரத்ததானம் அளிக்க கூடாது : உச்ச நீதிமன்றம்!

Next Post

சீனா : ஐ போன்கள் தடை!

Related News

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies