திருமலை நடைபாதை : கைத்தடிகள் விநியோகம்!
Mar 15, 2026, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

திருமலை நடைபாதை : கைத்தடிகள் விநியோகம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 8, 2023, 12:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அலிபிரி நடைபாதை வழியாக திருமலைக்கு மலையேற்றம் செல்லும் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம், மரக் குச்சிகளை விநியோகம் செய்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது.

TTD அறக்கட்டளை வாரியத் தலைவர் பூமனா கருணாகர ரெட்டி மற்றும் நிர்வாக அதிகாரி எ.வி. தர்மா ரெட்டி ஆகியோர் புதன்கிழமை அலிபிரி பாதலா மண்டபத்தில் பக்தர்களுக்கு குச்சிகளை வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கினர். கடந்த மாதம் சிறுத்தை தாக்கி ஆறு வயது சிறுவனின் உயிரை பறித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பூமனா, வன விலங்குகளின் தாக்குதலுக்கு எதிராக பக்தர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் தற்காப்புப் பயிற்சியின் ஒரு பகுதியே இது. மேலும் இரண்டு சிறுத்தைகளின் நடமாட்டம் கேமராக்கள் மூலம் படம்பிடிக்கப்பட்ட நாளில் TTD சேர்மன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

காட்டு விலங்குகளின் தாக்குதலைத் தடுக்க TTD யின் முயற்சிகளைப் பற்றி பூமனா குறிப்பிடுகையில், “பக்தர்களின் பாதுகாப்புக் கருத்தி குழுக்களாக பக்தர்களை அனுப்பி அவர்களுடன் காவலர்களும் அனுப்பப்பட்டன, மேலும் காட்டு விலங்குகள் இருக்கும் பகுதிகளில் காவலர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நடவடிக்கைகள் நான்கு சிறுத்தைகளை பிடிக்க உதவியுள்ளது” என்று கூறினார்.

ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோவிலுக்கு வந்த பிறகு பக்தர்களிடமிருந்து மரக் குச்சிகள் திரும்பப் பெறப்படும். யாத்திரையின் போது ஒவ்வொரு பக்தரும் பாதுகாப்பாக உணருவதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம், என்று TTD தலைவர் வலியுறுத்தினார்.

சிறுத்தைகள் நடமாடியது குறித்து தர்மா ரெட்டி கூறுகையில், “ஏழாவது மைல் பாயின்ட் மற்றும் சிலாதோரணம் அருகே இரண்டு பெரிய பூனைகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு இடங்களிலும் விலங்குகளைப் பிடிக்க கூண்டுகள் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளன.

இதையொட்டி, அலிபிரி நடைபாதையில் பாதுகாப்புப் பணியாளர்களுடன் பக்தர்கள் குழுவாகச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஒளிபரப்பு அமைப்பு மூலம் வனவிலங்கு செயல்பாடு குறித்து பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறையும் 100 பணியாளர்களை நியமித்துள்ளது, என EO விளக்கினார்.

இதற்கிடையில், ஒதுக்கப்பட்ட வன மண்டலத்தில் வரும் அலிபிரி நடைபாதையில் இரும்பு வேலி அமைப்பதற்கான பரிந்துரைகளை TTD இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் மத்திய வன அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது.

Tags: tirupathi tirumalaitiruppati templetirupathi
ShareTweetSendShare
Previous Post

இவர்கள் இரத்ததானம் அளிக்க கூடாது : உச்ச நீதிமன்றம்!

Next Post

சீனா : ஐ போன்கள் தடை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies