ஜல் ஜீவன் திட்டம்: 13 கோடி கிராமப்புற வீடுகளுக்குக் குழாய் இணைப்பு!
Oct 3, 2025, 09:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜல் ஜீவன் திட்டம்: 13 கோடி கிராமப்புற வீடுகளுக்குக் குழாய் இணைப்பு!

Web Desk by Web Desk
Sep 8, 2023, 12:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 13 கோடி கிராமப்புற வீடுகளுக்குக் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி ‘ஜல்ஜீவன் மிஷன்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டமானது கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது ஆகும். அனைத்து ஊரக வீடுகளும், குடிநீர் பெறுவதில் தன்னிறைவு பெறுவதே ‘ஜல்ஜீவன்’ திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்தின் தொடக்கத்தின் போது வெறும், 3 கோடியே 23 இலட்சம் கிராமப்புற வீடுகளுக்கு மட்டுமே குழாய் இணைப்புகள் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் கிராமப்புற வீடுகளுக்கு 13 கோடி குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு, புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

தற்போதைய, நிலவரப்படி, கோவா, தெலங்கானா, ஹரியானா, குஜராத், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, டையூ & டாமன், அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு 100 சதவீதம் அளவுக்கு முழுமையாகக் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பீகாரில் 96.39 சதவீதம் அளவிலும், மிசோரமில் 92.12 சதவீதம் அளவிலும் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களும் விரைவில் முழுமையான குழாய் இணைப்புகளைப் பெறவுள்ளது.

இதற்கிடையே, கோவா, ஹரியானா, பஞ்சாப், அந்தமான் நிக்கோபார், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சீரான குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதைக் கிராமச் சபைகள் மூலம் கிராம மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மத்திய அரசின் இடைவிடாத முயற்சிகளின் விளைவாக, நாட்டில் 9 இலட்சத்து 15 ஆயிரம் பள்ளிகள் மற்றும் 9 இலட்சத்து 52 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்க்கை மாறி உள்ளது. முன்பு பெண்கள் நீண்ட தூரம் நடந்து சென்று குடங்களில் குடிநீரைச் சுமந்து வந்தனர். தற்போது வீட்டு வாசலிலேயே குடிநீர் கிடைப்பதால் அவர்களின் நேரம் சேமிக்கப்பட்டுள்ளதோடு அவர்களின் வாழ்க்கை நிலையும் மாறியுள்ளது.

Tags: central governmentjal jeevan
ShareTweetSendShare
Previous Post

1 பிஸ்கெட் குறைவு: 1 இலட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

Next Post

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Related News

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

Load More

அண்மைச் செய்திகள்

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies