ISIS தீவிரவாதிகளின் சதி திட்டத்திற்குச் சமாதி கட்டிய என்.ஐ.ஏ.!
Jan 14, 2026, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ISIS தீவிரவாதிகளின் சதி திட்டத்திற்குச் சமாதி கட்டிய என்.ஐ.ஏ.!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 8, 2023, 01:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் ISIS தீவிரவாதிகள் குறிப்பிட்ட ஒரு சில மதத் தலைவர்களைக் கொலை செய்யத் திட்டமிட்டதும், அதை அறிந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அந்த பயங்கரவாதிகளைக் கைது செய்ததன் மூலம், சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி இறந்துவிட்டாலும், அந்த அமைப்பு தொடர்ந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக, அமெரிக்கா மற்றும் மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள காவல்துறையினர் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தியாவில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களில் ISIS தீவிரவாத இயக்கத்தினர் கால்பதித்து, சதித்திட்டம் தீட்டி வருவதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால், 4 மாநிலங்களிலும், என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில்தான், சென்னை பாடியில் சையது நபீல் அகமது பதுங்கி இருப்பதாக என்.ஐ.ஏ.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பாடியில் தங்கும் விடுதி ஒன்றில் இருந்த சையது நபீல் அகமதுவைச்  சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையில், கேரளாவில் ISIS தீவிரவாத ஆதரவாளர்கள் தனிக்குழு அமைத்து செயல்பட்டு வருவது தெரிய வந்தது. குறிப்பாக, திருச்சூரில் ISIS தீவிரவாத கும்பலின் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு சதி திட்டம் தீட்டியது வெளியானது.

இவர்கள் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் குறிப்பிட்ட ஒரு மதத் தலைவர்களைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதை் கண்டுபிடித்து, வெற்றிகமாக முறியடித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஐ.எஸ். கும்பலின் தலைவன் சையது நபீல் அகமது கைது செய்யப்பட்டுள்ளான்.

தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் முச்சந்தி காடுகளிலும், சந்தனகட்டை வீரப்பன் வாழ்ந்த காடுகளிலும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் ஆயுத பயிற்சி மற்றும் ஒத்திகையில் ஈடுபட்டது தொடர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே, சையது நபீல் அகமதுவின் கூட்டாளியான ஆசீப் என்பவனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில், மேலும் சிலரை கைது செய்ய என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்து களத்தில் குதித்துள்ளனர்

ShareTweetSendShare
Previous Post

உதயநிதியைக் கண்டித்து இந்து முன்னனி ஆர்ப்பாட்டம்!

Next Post

திமுக கொள்ளையர்களை விரட்ட வேண்டும்!- அண்ணாமலை

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies