திமுக கொள்ளையர்களை விரட்ட வேண்டும்!- அண்ணாமலை
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக கொள்ளையர்களை விரட்ட வேண்டும்!- அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Sep 8, 2023, 10:32 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தாத்தாவும் தந்தையும் இல்லையென்றால் உதயநிதி யார்? என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

இன்றைய “என் மண் என் மக்கள்” பயணம், என்றும் தேசிய சிந்தனையில் பயணிக்கும் வீரம் விளைந்த உசிலம்பட்டி மண்ணில் இனிதே நடந்தேறியது. குற்றப் பரம்பரை சட்டம் என்னும் ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய வீரமிக்க மக்கள் நிறைந்த மண் இது.

தென்னிந்தியாவின் ஜாலியன் வாலாபாக் என்று அழைக்கப்படும் பெருங்காமநல்லூர் படுகொலை, ஆங்கிலேயர்களால் குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு. தங்கள் சுய மரியாதையையும் வீரத்தையும் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று போராடிய 17 பேர் உயிர்த்… pic.twitter.com/W6yrj7uwkn

— K.Annamalai (@annamalai_k) September 7, 2023

குற்றப் பரம்பரை சட்டத்துக்கு எதிராகப் போராடி, நான்கு ஆண்டுகள் சிறையில் கழித்தார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். தனது தொடர் போராட்டத்தின் மூலம், குற்றப் பரம்பரை சட்டத்தை நீக்க வைத்தவர் தேவர் ஐயா.

தனது சொத்துக்களை ஏழை எளிய மக்களுக்காகக் கொடுத்தவர். இந்தியாவில் இரண்டு பேருக்குத் தான் ஆங்கிலேயர்கள் வாய்ப்பூட்டுச் சட்டம் இட்டார்கள். பசும்பொன் தேவர் ஐயா மற்றும் பால கங்காதர திலகர்.

அவரது அரசியல் வாரிசானக் கல்விச் செம்மல் ஐயா மூக்கையாத் தேவர் கச்சத் தீவை தாரை வார்த்ததை எதிர்த்து, பாராளுமன்றத்தில், என்னுடைய தொகுதியில் உள்ள கச்சத் தீவு தமிழகத்தின் பகுதி.

இதனைத் தாரைவார்க்கும் காங்கிரஸ் கட்சியினர் தமிழினத் துரோகிகள் என்றவர். 25 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றிபெற்றவர். அத்தகைய தலைவர்கள் வாழ்ந்த மண் இது. அந்தக் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுகவும் தமிழினத் துரோகிகள்தான்.

உசிலம்பட்டியில், தேவர் ஐயா மற்றும் ஐயா மூக்கையா தேவர் ஆகியோர் வரிசையில், நேதாஜிக்கும் சிலை அமைக்க, தமிழக பாஜக முயற்சிகள் மேற்கொள்ளும்.

தென்னிந்தியாவின் ஜாலியன் வாலாபாக் என்று அழைக்கப்படும் பெருங்காமநல்லூர் படுகொலை, ஆங்கிலேயர்களால் குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு.

தங்கள் சுய மரியாதையையும் வீரத்தையும் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று போராடிய 17 பேர் உயிர்த் தியாகம் செய்தவர்களின் வாரிசுகளான நாம், வெள்ளையர்களுக்குப் பின் வந்த இந்த திமுக கொள்ளையர்களை விரட்ட வேண்டும். நமது சனாதன தர்மத்தை அழிப்போம் என்கிறார் அமைச்சர் உதயநிதி.

தாத்தாவும் தந்தையும் இல்லையென்றால் உதயநிதி யார்? உதயநிதி அவர்களுக்கு, மதுரை மீனாட்சி அம்மனை அவதூறாகப் பேசிய திமுக தலைவர் அண்ணாதுரை அவர்களை, முத்துராமலிங்கத் தேவர் ஐயா எச்சரித்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த மண் ஆன்மீக மண். இங்கே உங்கள் வெறுப்புப் பிரச்சாரம் செல்லாது.

இதுவரை, திமுக உசிலம்பட்டி தொகுதியில் ஜெயித்ததே இல்லை என்பதுதான் இந்த மக்களின் பெருமை. முத்துராமலிங்கத் தேவர் ஐயா, மூக்கையா தேவர் ஐயா வரிசையில் வைக்கும் அளவுக்கான தகுதி நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மட்டும்தான் உள்ளது.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், என்றும் தேசியத்தின் பக்கமே நின்று,  பாரதப் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalaiannamalai en mann en makkal rally
Share
Tweet
SendShare
Previous Post

ISIS தீவிரவாதிகளின் சதி திட்டத்திற்குச் சமாதி கட்டிய என்.ஐ.ஏ.!

Next Post

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies