திமுக கொள்ளையர்களை விரட்ட வேண்டும்!- அண்ணாமலை
Aug 15, 2025, 12:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக கொள்ளையர்களை விரட்ட வேண்டும்!- அண்ணாமலை

Web Desk by Web Desk
Sep 8, 2023, 10:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாத்தாவும் தந்தையும் இல்லையென்றால் உதயநிதி யார்? என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

இன்றைய “என் மண் என் மக்கள்” பயணம், என்றும் தேசிய சிந்தனையில் பயணிக்கும் வீரம் விளைந்த உசிலம்பட்டி மண்ணில் இனிதே நடந்தேறியது. குற்றப் பரம்பரை சட்டம் என்னும் ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய வீரமிக்க மக்கள் நிறைந்த மண் இது.

தென்னிந்தியாவின் ஜாலியன் வாலாபாக் என்று அழைக்கப்படும் பெருங்காமநல்லூர் படுகொலை, ஆங்கிலேயர்களால் குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு. தங்கள் சுய மரியாதையையும் வீரத்தையும் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று போராடிய 17 பேர் உயிர்த்… pic.twitter.com/W6yrj7uwkn

— K.Annamalai (@annamalai_k) September 7, 2023

குற்றப் பரம்பரை சட்டத்துக்கு எதிராகப் போராடி, நான்கு ஆண்டுகள் சிறையில் கழித்தார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். தனது தொடர் போராட்டத்தின் மூலம், குற்றப் பரம்பரை சட்டத்தை நீக்க வைத்தவர் தேவர் ஐயா.

தனது சொத்துக்களை ஏழை எளிய மக்களுக்காகக் கொடுத்தவர். இந்தியாவில் இரண்டு பேருக்குத் தான் ஆங்கிலேயர்கள் வாய்ப்பூட்டுச் சட்டம் இட்டார்கள். பசும்பொன் தேவர் ஐயா மற்றும் பால கங்காதர திலகர்.

அவரது அரசியல் வாரிசானக் கல்விச் செம்மல் ஐயா மூக்கையாத் தேவர் கச்சத் தீவை தாரை வார்த்ததை எதிர்த்து, பாராளுமன்றத்தில், என்னுடைய தொகுதியில் உள்ள கச்சத் தீவு தமிழகத்தின் பகுதி.

இதனைத் தாரைவார்க்கும் காங்கிரஸ் கட்சியினர் தமிழினத் துரோகிகள் என்றவர். 25 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றிபெற்றவர். அத்தகைய தலைவர்கள் வாழ்ந்த மண் இது. அந்தக் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுகவும் தமிழினத் துரோகிகள்தான்.

உசிலம்பட்டியில், தேவர் ஐயா மற்றும் ஐயா மூக்கையா தேவர் ஆகியோர் வரிசையில், நேதாஜிக்கும் சிலை அமைக்க, தமிழக பாஜக முயற்சிகள் மேற்கொள்ளும்.

தென்னிந்தியாவின் ஜாலியன் வாலாபாக் என்று அழைக்கப்படும் பெருங்காமநல்லூர் படுகொலை, ஆங்கிலேயர்களால் குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு.

தங்கள் சுய மரியாதையையும் வீரத்தையும் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று போராடிய 17 பேர் உயிர்த் தியாகம் செய்தவர்களின் வாரிசுகளான நாம், வெள்ளையர்களுக்குப் பின் வந்த இந்த திமுக கொள்ளையர்களை விரட்ட வேண்டும். நமது சனாதன தர்மத்தை அழிப்போம் என்கிறார் அமைச்சர் உதயநிதி.

தாத்தாவும் தந்தையும் இல்லையென்றால் உதயநிதி யார்? உதயநிதி அவர்களுக்கு, மதுரை மீனாட்சி அம்மனை அவதூறாகப் பேசிய திமுக தலைவர் அண்ணாதுரை அவர்களை, முத்துராமலிங்கத் தேவர் ஐயா எச்சரித்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த மண் ஆன்மீக மண். இங்கே உங்கள் வெறுப்புப் பிரச்சாரம் செல்லாது.

இதுவரை, திமுக உசிலம்பட்டி தொகுதியில் ஜெயித்ததே இல்லை என்பதுதான் இந்த மக்களின் பெருமை. முத்துராமலிங்கத் தேவர் ஐயா, மூக்கையா தேவர் ஐயா வரிசையில் வைக்கும் அளவுக்கான தகுதி நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மட்டும்தான் உள்ளது.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், என்றும் தேசியத்தின் பக்கமே நின்று,  பாரதப் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalaiannamalai en mann en makkal rally
ShareTweetSendShare
Previous Post

ISIS தீவிரவாதிகளின் சதி திட்டத்திற்குச் சமாதி கட்டிய என்.ஐ.ஏ.!

Next Post

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Related News

தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ஆக உயர்வு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies