ஆசியக் கால்பந்து போட்டி: இந்திய அணி பங்குபெறுமா ?
Jul 26, 2025, 12:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசியக் கால்பந்து போட்டி: இந்திய அணி பங்குபெறுமா ?

ஐ.எஸ்.எல். போட்டியால் சிக்கல்!

Web Desk by Web Desk
Sep 8, 2023, 01:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐ.எஸ்.எல். போட்டி நடைபெறும் அதேசமயத்தில், ஆசிய விளையாட்டு போட்டியும் நடைபெறுவதால் கால்பந்துப் போட்டியில் இந்திய அணி பங்குபெறுமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

19-வது ஆசிய விளையாட்டு போட்டி, சீனாவின் ஹாங்சோவ் நகரில் வரும் 23-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், கால்பந்து போட்டிகள் வரும் 19-ம் தேதி முதல் அக்டோபர் 7-ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில் இந்திய அணியைச் சேர்ந்த 22 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த அணியில் பெங்களூரு எப்.சி.யிலிருந்து 6 வீரர்களும், மும்பை சிட்டியிலிருந்து 3 வீரர்களும், எப்.சி. கோவா, மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால், ஒடிஸா, கேரளா பிளாஸ்டர்ஸ் ஆகியவற்றில் இருந்து தலா 2 வீரர்களும், பஞ்சாப் எப்.சி., சென்னையின் எப்.சி., ஐதராபாத் எப்.சி.யில் இருந்து தலா 1 வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

எனினும், ஐ.எஸ்.எல். போட்டி நடைபெறும் அதேநேரத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளும் நடப்பதால், அப்போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களில் சிலரை சம்பந்தப்பட்ட கிளப் நிர்வாகம் விடுவிக்க மறுப்பதால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அகில இந்திய கால்பந்து சம்மேளன பொதுச்செயலாளர் ஷாஜி பிரபாகரன், ஐ.எஸ்.எல். அணி நிர்வாகத்தினருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், “ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய கால்பந்து அணிக்கு தேர்வாகி இருக்கும் வீரர்களை தேசத்தின் நலனை மனதில் கொண்டு கிளப் நிர்வாகங்கள் விடுவிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து, அகில இந்திய கால்பந்து சம்மேளனத் தலைவர் கல்யாண் சவுபே கூறுகையில், “ஐ.எஸ்.எல். போட்டியை 10 நாட்கள் தள்ளி வைத்து அக்டோபர் மாதத்தில் தொடங்குமாறு போட்டி அமைப்பு குழுவினர் மற்றும் அணிகளின் நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக, ஐ.எஸ்.எல். போட்டி அமைப்புக் குழு நிர்வாகி ஒருவர் கூறுகையில், “அகில இந்திய கால்பந்து சம்மேளனம் மற்றும் அனைத்து அணிகளிடமும் கலந்து ஆலோசித்துத்தான் போட்டி அட்டவணை முடிவு செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் போட்டியை தள்ளி வைக்க வாய்ப்பில்லை” என்று கூறியிருக்கிறார்.

ஆகவே, ஆசிய விளையாட்டு கால்பந்துப் போட்டியில் இந்திய அணி பங்கேற்குமா என்பது பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது.

Tags: footballAsian sportsindian team
ShareTweetSendShare
Previous Post

உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும்!

Next Post

சர்வதேச எழுத்தறிவு தினம் இன்று!

Related News

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

சென்னை : இறுதி ஊர்வலத்தின் போது நாட்டு வெடி வெடித்து மாணவி படுகாயம்!

திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் போலீசார் அனுமதி வழங்குவதில்லை : இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு!

நாட்டை காக்க வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies