ஆசியக் கால்பந்து போட்டி: இந்திய அணி பங்குபெறுமா ?
Jan 14, 2026, 06:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசியக் கால்பந்து போட்டி: இந்திய அணி பங்குபெறுமா ?

ஐ.எஸ்.எல். போட்டியால் சிக்கல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 8, 2023, 01:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐ.எஸ்.எல். போட்டி நடைபெறும் அதேசமயத்தில், ஆசிய விளையாட்டு போட்டியும் நடைபெறுவதால் கால்பந்துப் போட்டியில் இந்திய அணி பங்குபெறுமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

19-வது ஆசிய விளையாட்டு போட்டி, சீனாவின் ஹாங்சோவ் நகரில் வரும் 23-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், கால்பந்து போட்டிகள் வரும் 19-ம் தேதி முதல் அக்டோபர் 7-ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில் இந்திய அணியைச் சேர்ந்த 22 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த அணியில் பெங்களூரு எப்.சி.யிலிருந்து 6 வீரர்களும், மும்பை சிட்டியிலிருந்து 3 வீரர்களும், எப்.சி. கோவா, மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால், ஒடிஸா, கேரளா பிளாஸ்டர்ஸ் ஆகியவற்றில் இருந்து தலா 2 வீரர்களும், பஞ்சாப் எப்.சி., சென்னையின் எப்.சி., ஐதராபாத் எப்.சி.யில் இருந்து தலா 1 வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

எனினும், ஐ.எஸ்.எல். போட்டி நடைபெறும் அதேநேரத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளும் நடப்பதால், அப்போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களில் சிலரை சம்பந்தப்பட்ட கிளப் நிர்வாகம் விடுவிக்க மறுப்பதால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அகில இந்திய கால்பந்து சம்மேளன பொதுச்செயலாளர் ஷாஜி பிரபாகரன், ஐ.எஸ்.எல். அணி நிர்வாகத்தினருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், “ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய கால்பந்து அணிக்கு தேர்வாகி இருக்கும் வீரர்களை தேசத்தின் நலனை மனதில் கொண்டு கிளப் நிர்வாகங்கள் விடுவிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து, அகில இந்திய கால்பந்து சம்மேளனத் தலைவர் கல்யாண் சவுபே கூறுகையில், “ஐ.எஸ்.எல். போட்டியை 10 நாட்கள் தள்ளி வைத்து அக்டோபர் மாதத்தில் தொடங்குமாறு போட்டி அமைப்பு குழுவினர் மற்றும் அணிகளின் நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக, ஐ.எஸ்.எல். போட்டி அமைப்புக் குழு நிர்வாகி ஒருவர் கூறுகையில், “அகில இந்திய கால்பந்து சம்மேளனம் மற்றும் அனைத்து அணிகளிடமும் கலந்து ஆலோசித்துத்தான் போட்டி அட்டவணை முடிவு செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் போட்டியை தள்ளி வைக்க வாய்ப்பில்லை” என்று கூறியிருக்கிறார்.

ஆகவே, ஆசிய விளையாட்டு கால்பந்துப் போட்டியில் இந்திய அணி பங்கேற்குமா என்பது பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது.

Tags: footballAsian sportsindian team
ShareTweetSendShare
Previous Post

உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும்!

Next Post

சர்வதேச எழுத்தறிவு தினம் இன்று!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies