பள்ளி குடிநீர் தொட்டியில் சாணம் - அதிர்ச்சியில் பொதுமக்கள்!
Jan 14, 2026, 09:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளி குடிநீர் தொட்டியில் சாணம் – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 8, 2023, 04:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் குடிநீரில் மர்ம நபர்கள் சாணத்தைக் கலந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டி ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாணவர்களுக்கு, வழக்கம்போல், காலை சிற்றுண்டி தயார் செய்ய வேண்டும் என்பதால், பள்ளியில் உள்ள சமையல் கூடத்தில் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்தவர்கள் அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உணவு தயாரிப்பதற்காக குடிநீர் தொட்டியை திறந்து பார்த்தபோது, தொட்டியில் உள்ள குடிநீரில் ஒருவித துர்நாற்றம் அடித்துள்ளது. அதை முழுவதுமாக ஆய்வு செய்தபோது, அதில் மர்ம நபர்கள் யாரோ, சாணம் கலந்திருப்பது தெரிய வந்தது.

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த சுய உதவிக் குழுவினர், இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர், தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி, தொட்டியை சுத்தம் செய்தனர்.

இதனால், காலை சிற்றுண்டி செய்யும் பணி மிகவும் தாமதமானது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

அதேபோல, அடுத்த நாளும், பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில், மர்ம நபர்கள் சாணம் கலந்தது கண்டு அப்பகுதி மக்கள் மேலும் அதிர்ச்சியடைந்தனர்.

தகவல் அறிந்து சம்ப இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு, முன்னர், பதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்த நிலையில், தற்போது, மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் தண்ணீரில் சாணத்தைக் கலந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இரண்டு சம்பவங்களிலும் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் திமுக அரசு திணறி வருகிறது என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags: taminaduprimary school
ShareTweetSendShare
Previous Post

இராவணனாலேயே முடியல… உதயநிதி எல்லாம் தூசு..!

Next Post

பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies