ஜி20 மாநாட்டை நடத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி: பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
Oct 25, 2025, 03:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜி20 மாநாட்டை நடத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி: பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

‘வசுதைவ குடும்பகம்’ என்ற குறிக்கோளுடன் ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்கி இருப்பதாக பெருமிதம்!

Web Desk by Web Desk
Sep 8, 2023, 06:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜி20 மாநாட்டை நடத்துவதில் இந்தியா மிகுந்த மகிழ்ச்சியடைகிறது என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “வசுதைவ குடும்பகம்” என்ற கருப்பொருளை மையமாக வைத்து ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்கி இருக்கிறது என்று பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.

தற்போது, ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. இதையடுத்து, ஜி20 அமைப்பின் வணிகப் பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளின் உச்சி மாநாடு, நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த சூழலில், ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு தேசியத் தலைநகர் டெல்லியில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது.

இம்மாநாட்டில், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 40 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். ஆகவே, தலைநகர் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஜி20 உச்சி மாநாடு நடக்கும் பாரத மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் மத்திய பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இதனிடையே, இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அர்ஜென்டினா அதிபர் ஆல்பெர்டோ பெர்னான்டஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஆப்பிரிக்க யூனியன் தலைவர் அசோலி அசோமானி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இன்று டெல்லியை வந்தடைந்து விட்டனர்.

இந்த நிலையில், ஜி20 மாநாடு நடக்கும் பாரத் மண்டபத்தில் சிறப்பு பூஜைகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஜி20 மாநாட்டை முதல் முறையாக இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. டெல்லியிலுள்ள பாரத மண்டபத்தில் வரும் 9, 10-ம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது. அடுத்த 2 நாட்களுக்கு உலக நாடுகளின் தலைவர்களுடன் மிகவும் ஆரோக்கியமான உரையாடல் இருக்கும் என நான் நம்புகிறேன்.

டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாடு மனிதத்தை மையப்படுத்தியதாகவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாகவும் அமையும் என்று நான் நம்புகிறேன். நமது கலாச்சார பண்பாட்டில் வேரூன்றி இருக்கும் ‘வசுதைவ குடும்பகம்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்கி இருக்கிறது.

ஒரே நாடு, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பது முழு உலகமும் ஒரே குடும்பம் என்கிற நமது உலக கண்ணோட்டத்துடன் ஆழமாக எதிரொலிக்கிறது. நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த நான் சில நாட்டுத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். இந்தியாவின் விருந்தோம்பலால் நம் விருந்தினர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Tags: PM ModiG20interview
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி இன்று அமெரிக்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்!

Next Post

ஆசிய ஹாக்கி போட்டி : தீபிகா மகிழ்ச்சி!

Related News

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

Load More

அண்மைச் செய்திகள்

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு!

வங்கி வாடிக்கையாளர்கள் இனி 4 வாரிசுதாரரை நியமிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

பேச்சிப்பாறை அணை திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மதுரையில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை – சாலையில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!

கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் – ஹெச்.ராஜா விமர்சனம்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies