ஜி20 மாநாட்டை நடத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி: பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
Jan 14, 2026, 01:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜி20 மாநாட்டை நடத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி: பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

‘வசுதைவ குடும்பகம்’ என்ற குறிக்கோளுடன் ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்கி இருப்பதாக பெருமிதம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 8, 2023, 06:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜி20 மாநாட்டை நடத்துவதில் இந்தியா மிகுந்த மகிழ்ச்சியடைகிறது என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “வசுதைவ குடும்பகம்” என்ற கருப்பொருளை மையமாக வைத்து ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்கி இருக்கிறது என்று பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.

தற்போது, ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. இதையடுத்து, ஜி20 அமைப்பின் வணிகப் பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளின் உச்சி மாநாடு, நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த சூழலில், ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு தேசியத் தலைநகர் டெல்லியில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது.

இம்மாநாட்டில், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 40 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். ஆகவே, தலைநகர் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஜி20 உச்சி மாநாடு நடக்கும் பாரத மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் மத்திய பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இதனிடையே, இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அர்ஜென்டினா அதிபர் ஆல்பெர்டோ பெர்னான்டஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஆப்பிரிக்க யூனியன் தலைவர் அசோலி அசோமானி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இன்று டெல்லியை வந்தடைந்து விட்டனர்.

இந்த நிலையில், ஜி20 மாநாடு நடக்கும் பாரத் மண்டபத்தில் சிறப்பு பூஜைகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஜி20 மாநாட்டை முதல் முறையாக இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. டெல்லியிலுள்ள பாரத மண்டபத்தில் வரும் 9, 10-ம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது. அடுத்த 2 நாட்களுக்கு உலக நாடுகளின் தலைவர்களுடன் மிகவும் ஆரோக்கியமான உரையாடல் இருக்கும் என நான் நம்புகிறேன்.

டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாடு மனிதத்தை மையப்படுத்தியதாகவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாகவும் அமையும் என்று நான் நம்புகிறேன். நமது கலாச்சார பண்பாட்டில் வேரூன்றி இருக்கும் ‘வசுதைவ குடும்பகம்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்கி இருக்கிறது.

ஒரே நாடு, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பது முழு உலகமும் ஒரே குடும்பம் என்கிற நமது உலக கண்ணோட்டத்துடன் ஆழமாக எதிரொலிக்கிறது. நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த நான் சில நாட்டுத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். இந்தியாவின் விருந்தோம்பலால் நம் விருந்தினர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Tags: PM ModiG20interview
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி இன்று அமெரிக்க அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்!

Next Post

ஆசிய ஹாக்கி போட்டி : தீபிகா மகிழ்ச்சி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies